கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு மற்றும் சூரியனின் சேர்க்கை ஆறாவது வீட்டில் நடைபெற இருக்கிறது. இது எதிர்மறை பலன்களைக் கொடுக்கும். ஆறாவது வீடு நோய், எதிரி, பயம், தடை மற்றும் நீதிமன்றத்தின் வீடாக கருதப்படுகிறது. எனவே இந்த நேரத்தில் நீங்கள் நீதிமன்ற வழக்குகளில் பின்னடைவு அல்லது தோல்வியை சந்திக்கலாம்.
எதிரிகள் உங்களை தொந்தரவு செய்யக்கூடும். இதயம் தொடர்பான நோய்கள் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். தொண்டை மற்றும் மார்பு நோய்கள் உங்களை தொந்தரவு செய்யலாம். எனவே இந்த காலகட்டத்தில் சூரிய பகவானை வணங்குவது, சூரிய நமஸ்காரம் செய்வது, ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது அசுப விளைவுகளை குறைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)