
பொதுவா ஆடி மாதம் அம்பிகைக்கு விசேஷமான மாதம். அதிலும் சில கிழமைகள் அம்பாளுக்கு ரொம்ப ரொம்ப விசேஷமானது. குறிப்பா செவ்வாய்க்கிழமை. இந்த செவ்வாய்க்கிழமை அப்படிங்கறதுக்கு நிறைய சிறப்புகள் உண்டு. ஆடி செவ்வாய் என்பது ரொம்ப மங்களகரமான நாள். அம்பிகைக்கு ரொம்ப ரொம்ப விசேஷமான நாள். ஏன் முருக வழிபாட்டில கூட செவ்வாக்கிழமை ரொம்ப ரொம்ப விசேஷமானது. அப்படி பல சிறப்புகள் உள்ளடக்கியதுதான் இந்த செவ்வாய். ஆடி மாசத்துல எத்தனை செவ்வாய்க்கிழமை வருது அப்படிங்கறத பார்ப்போம். அதுக்கு பிறகு இரண்டாவது செவ்வாய்க்கிழமையில் என்ன வழிபாடு செய்யணும் அப்படிங்கிறத பாக்கலாம்.
இதையும் படியுங்கள் - ஜாதகத்தில் சனி பகவான் எந்த வீட்டில் அமர்ந்து இருக்கிறார்னு பாருங்க.! உங்களுக்கு என்ன பலன் கிடைக்கும்னு நாங்க சொல்றோம்.!
மொத்தம் நாலு செவ்வாய்க்கிழமை நமக்கு இந்த ஆடி மாசத்தில் அமைஞ்சிருக்கு. பொதுவாகவே செவ்வாய்க்கிழமை கடன் அடைக்கறதுக்கு ரொம்ப நல்ல நாள். அதே மாதிரி ஆடி மாதத்தில வர்ற செவ்வாய்க்கிழமை அன்று நாம் செய்யக்கூடிய சில எளிமையான வழிபாடுகள் கடன் சுமையில இருந்து நம்மை காப்பாற்றும் அப்படிங்கிறது நிதர்சனமான உண்மை. நிறைய பேருக்கு இது கைக்கண்ட ஒரு பலனாகவே அமைஞ்சிருக்கு. கடன் பிரச்சினைகள் தீர ஆடி இரண்டாவது செவ்வாயில் கீழே கூறப்பட்டுள்ள வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
இதையும் படியுங்கள் - கோடி ரூபாய் கொடுத்தாலும், இவர்களை மட்டும் திருமணம் செய்யாதீர்கள்.! சாணக்கியர் கூறும் அறிவுரை.!
ஆடி மாத இரண்டாவது செவ்வாய்க்கிழமை ஜூலை மாதம் 28ஆம் தேதி நமக்கு வருது. இந்த செவ்வாய்க்கிழமை அன்னைக்கு அம்பிகைக்கு எளிமையாக ஏதாவது ஒரு அபிஷேகம். நீங்க வீட்ல அம்பிகையினுடைய திருவுருவ படம் வச்சிருக்கறீங்க அப்படின்னா பால், பழங்கள் நெய்வேத்தியம் பண்ணி வழிபாடு பண்ணலாம். இல்ல அம்பாள விக்கிரகமாக வச்சிருக்கீங்கன்னா வீட்லயே கூட நீங்க இந்த அபிஷேகம் செய்யலாம். வீட்ல எங்கள்ட்ட படம் இல்ல விக்கிரகம் இல்ல அதெல்லாம் எதுவுமே இல்ல நாங்க எளிமையாதான் பூஜை அறை வச்சிருக்கிறோம். ஆனா பக்கத்துல கோயிலுக்கு போய் வழிபடுறதுக்கு வாய்ப்பு இருக்கு அப்படிங்கறவங்க செவ்வாய்க்கிழமை அன்னைக்கு கோயிலுக்கு போயிட்டு அம்பிகைக்கு எப்ப அபிஷேகம் நடக்கும் அப்படிங்கிற நேரம் கேட்டுக்கோங்க.
இதையும் படியுங்கள் - ஆடி வெள்ளி அம்மன் உங்க வீட்டுக்கு வரணுமா? இதை மட்டும் செய்யுங்கள்! தேச மங்கையர்கரசி சொன்ன ரகசியம்.!
மற்ற காலங்கள்ல அந்த கால நெறிப்படி அபிஷேகம் நடக்கும். ஆனா செவ்வாய்க்கிழமை சில கோவில்கள்ல அம்பாள் கோவில்ல விசேஷமாக அபிஷேகம் நடக்கும். ஏன்னா நிறைய அபிஷேகப் பொருட்கள் கொண்டு வந்து பக்தர்கள் கொடுக்கிற காரணத்தினால நீண்ட நேரம் அந்த அபிஷேகம் இருக்கும். உங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற கோவில்ல செவ்வாய்க்கிழமை அன்னைக்கு எப்ப அபிஷேகம் அப்படிங்கறத கேட்டுக்கோங்க. கேட்டுக்கிட்டு பால், பச்சரிசி மாவு இந்த ரெண்டு பொருளும் வாங்கி கொடுங்க. ஏன்னா பால் நல்ல வளம், நலம், செல்வம் எல்லாவிதமான சௌகரியங்களையும் நமக்கு பெற்று தரும். பச்சரிசி மாவு நமக்கு பிறவி கடனையும் நீக்கும். இப்ப வாங்கி இருக்கிற கடனும் நீங்கும். நம்முடைய துன்பங்களும் நீங்கும்.
இதையும் படியுங்கள் - மரணத்திற்கு பின் ஆன்மா எத்தனை நாள் வீட்டிலேயே இருக்கும்? எப்போது வீட்டை விட்டு வெளியேறும் தெரியுமா? கருட புராணம் சொல்வது என்ன?
வாழ்க்கையில ரொம்ப ரொம்ப பிரச்சனையில் இருக்கிறவங்களுக்கு இந்த ரெண்டு அபிஷேகம் அப்படிங்கறது ரொம்ப நல்ல ஒரு விமோசனத்தை பெற்று தரும். ஒன்னு பால், அப்படி இல்லன்னா பச்சரிசி மாவு. ரெண்டுமே வாங்கி கொடுக்க முடியும்னா வாங்கி கொடுங்க. பால் ஒரு அரை லிட்டர் வாங்குங்க. ஒரு கால் கிலோ பச்சரிசி மாவு வாங்கி கொடுங்க. இது ரெண்டுமே அம்பாளுக்கு அபிஷேகம் செய்து அதை நம்ம பார்த்து வழிபாடு செய்கின்ற போது நமக்கு ஏற்படக்கூடிய பல்வேறு வகையான பிரச்சனைகளில் இருந்து நமக்கு ஒரு விடுதலை கிடைக்கும். இந்த ஆடி மாசத்தில ஏதாவது ஒரு நாள் அம்பாளுக்கு நாம் அபிஷேகம் செய்கிற போது அது இன்னும் மங்களகரமான நலன்களையும் நமக்கு பெற்று தரும்.