2026-ல் அமெரிக்கா-இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கு எண் கணித ரீதியான அறிகுறிகள் இருந்ததாக கூறப்படுகிறது. நாடுகளின் எண் அதிர்வுகளும் இந்த மோதலுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என இந்த நியூமராலஜி பார்வை விளக்குகிறது.
2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்கள் மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. தற்போது வரை உலகம் முழுக்க பரபரப்பு ஏற்பட்டு உள்ளது தான் என்று கூற வேண்டும். இந்த சம்பவம் பலருக்கு திடீர் அதிர்ச்சியாக தோன்றியிருந்தாலும், எண் கணிதக் கோணத்தில் இதற்கு முன்பே சில அறிகுறிகள் இருந்ததாக நியூமராலஜி ஆர்வலர்கள் கூறுகின்றனர். 2026 என்பது 2+0+2+6 = 1 என்பதால் “யுனிவர்சல் இயர் 1” ஆக கருதப்படுகிறது. இந்த ஆண்டு சூரிய ஆற்றலால் இயக்கப்படுவதால் அதிகார வெளிப்பாடு, தீர்மானங்கள் மற்றும் புதிய தொடக்கங்கள் வலுப்பெறும் காலமாக பார்க்கப்படுகிறது.
25
யுனிவர்சல் இயர் 1
நியூமராலஜி கோட்பாட்டின்படி, “1” என்பது ஆதிக்கம் மற்றும் தன்னம்பிக்கை எண்ணைக் குறிக்கிறது. அதனால் நடந்த பேச்சுவார்த்தையை விட நேரடி நிலைப்பாடுகள் முன்னிலைப்படுத்தப்பட்டன. 2026 ஆண்டுக்கான முன்கூட்டிய கணிப்புகளில், நிலவும் சர்வதேச பதற்றங்கள் புதிய திசையில் நகரக்கூடும் என்றும், சில பகுதிகளில் திடீர் மோதல்கள் உருவாகின்றன வாய்ப்பு உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
35
அமெரிக்கா–இஸ்ரேல்–ஈரான் பதற்றம்
நாடுகளின் பெயர்களும் எண் அதிர்வுகளைக் கொண்டவை என நியூமராலஜி கருதுகிறது. அமெரிக்கா “1” ஆற்றலை, ஈரான் “9” ஆற்றலை, இஸ்ரேல் “6” ஆற்றலை பிரதிபலிக்கிறது என விளக்கப்படுகிறது. இதில் “1” மற்றும் “9” இணைப்பு தீவிர மோதலுக்கான சூழலை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக 4, 8, 9 போன்ற எண்கள் 2026ல் சென்சிட்டிவ் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், முக்கிய அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட சுழற்சிகளும் இந்த ஆண்டின் ஆற்றலுடன் இணையும் போது, தீர்மானங்கள் தீவிரமாகலாம் என இது பார்வை வலியுறுத்துகிறது. அதிகாரம், போர், நம்பிக்கை சோதனை போன்ற கருக்கள் 1x8 அல்லது 4x9 போன்ற இணைப்புகளில் வெளிப்படக்கூடும்.
55
உலக அதிகார மாற்றத்தின் அறிகுறியா?
ஆனால், இந்த விளக்கங்கள் அனைத்தும் எண் அடிப்படையிலான ஒரு பார்வை மட்டுமே என்பதைக் குறிப்பிடுவது அவசியம். நியூமராலஜி எதிர்காலத்தை உறுதியாக தீர்மானிப்பதல்ல. மாறாக, சில பாணிகளை விளக்க முயலும் ஒரு அணுகுமுறை என இதன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். 2026 ஆண்டு அதிகார வெளிப்பாடு மற்றும் புதிய சமன்பாடுகளை உருவாக்கும் காலமாக அமையுமா என்ற கேள்வி இன்னும் திறந்தே உள்ளது.