வேத ஜோதிடத்தின்படி, ஒருவரின் ஜாதகத்தில் 7-ஆம் வீடு (களத்திர ஸ்தானம் - வாழ்க்கைத்துணை மற்றும் திருமண வாழ்க்கை), மற்றும் சுக்கிரன், செவ்வாய், சனி, ராகு-கேது ஆகிய கிரகங்களின் தாக்கம் மிக முக்கியமானது.
- செவ்வாய் தோஷம் & ஈகோ மோதல்கள்: ஜாதகத்தில் 7 அல்லது 8-ஆம் வீட்டில் செவ்வாய் அமரும் போது அதிகப்படியான கோபம், ஈகோ மற்றும் அதிகாரப் போக்கு அதிகரித்து தம்பதிக்குள் கருத்து மோதலை உருவாக்கும்.
- ராகு-கேதுவின் தொடர்பு: களத்திர ஸ்தானத்தில் ராகு அல்லது கேது அமரும் போது, புரிதலின்மை, சந்தேகப் பார்வை மற்றும் திடீர் பிரியும் சூழ்நிலைகள் உருவாகும்.
ஜோதிட ரீதியாக, முற்றிலும் மாறுபட்ட சுபாவங்களைக் கொண்ட சில ராசிகள் இணைந்து திருமணம் செய்யும்போது அகங்கார மோதல்களால் விவாகரத்து வரை செல்லும் சூழல் உருவாகிறது. அப்படி, விவாகரத்து ஆபத்து அதிகம் உள்ள குறிப்பிட்ட 3 ராசி இணைப்புகள் எவை என பார்ப்போம்.
இதையும் படிங்க : Washing Machine : துணி துவைக்கும்போது இந்த 7 தவறுகளை செய்றீங்களா? மெஷினும் துணியும் பாதிக்கலாம்!