மேலும் மழையின் காரணமாக போக்குவரத்து செலவும் அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர். மேலும் வரும் நாட்களில் மழையின் பாதிப்பை பொறுத்து தக்காளி விலை இன்னமும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கின்றனர். இதனிடையே சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பச்சை காய்கறிகளின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும்,
பச்சை மிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது