பெற்றோர் கண்முன்னே இளைஞர் கொடூரமாக குத்தி கொலை... கோவையில் பதற்றம்..!

By vinoth kumarFirst Published May 22, 2019, 2:20 PM IST
Highlights

கோவையில் பெற்றோர் கண்முன்னே மகனை 4 பேர் கொண்ட கும்பம் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் பெற்றோர் கண்முன்னே மகனை 4 பேர் கொண்ட கும்பம் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது, மது போதை தலைக்கு எறியதால் மற்றொரு தரப்புக்கும், ஜான்பிரிட்டோவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். 

பின்னர் மதுக்கடையில் சண்டையிட்ட 4 பேர் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்தனர். வீட்டுக்கு வந்த ஜான் பிரிட்டோவுடனும், அவரின் பெற்றோருடனும் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜான்பிரிட்டோவை சரமாரியாக குத்தியுள்ளனர். இதிர் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜான்பிரிட்டோ பெற்றோர் கண்முன்னே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவரது நண்பரும் காயமடைந்தார்.

 

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜான்பிரிட்டோவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஜான் பிரிட்டோ மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளதும், தையல் தொழில் செய்துவரும் இவர், கஞ்சா வியாபாரி எனவும் தெரியவந்துள்ளது. 

click me!