எவ்வளவு சொன்னாலும் என் தங்கச்சிய விட்டு போகமாட்டியா? சிறுமியை காதலித்த வாலிபர் படுகொலை - அண்ணன் வெறிச்செயல்

By Velmurugan sFirst Published Nov 16, 2023, 11:30 PM IST
Highlights

திருப்பத்தூர் மாவட்டத்தில் 17 வயது சிறுமியை காதலித்து வந்த வாலிபரை சிறுமியின் அண்ணன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஜமான்கொல்லி பகுதியைச் சேர்ந்தவர் சின்னதம்பி. இவருடைய மகன்  முரளி (வயது 22). இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் தும்பேரி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை முரளி காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 5 மாதத்திற்கு முன்பு சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்வதற்காக அழைத்துச் சென்றுள்ளார். 

இது தொடர்பாக பெண்ணின் பெற்றோர் அம்பலூர்  காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிறுமியை மீட்டு  விசாரணை மேற்கொண்டு முரளி மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த நிலையில் மீண்டும் முரளி  அந்த சிறுமியை அடிக்கடி சந்தித்து பேசி வந்ததாக தெரிகிறது. இது குறித்து பலமுறை பெண்ணின் அண்ணன் சந்தோஷ்  கண்டித்துள்ளார். இருந்தபோதிலும் அவர் தொடர்ந்து சிறுமியிடம் பேசி வந்ததால் ஆத்திரமடைந்த பெண்ணின் அண்ணன் சந்தோஷ் முரளியை கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார்.

மயிலாடுதுறை காவிரி ஆற்றின் துலா உற்சவ தீர்த்தவாரி; ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்

இதில் சரிந்து விழுந்த முரளி சம்பவ  இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அம்பலூர் காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய சந்தோஷை தேடி வருகின்றனர்.

click me!