நான்கு பெண்களை ஏமாற்றி கல்யாணம் செய்தது எப்படி? போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்....

By sathish kFirst Published Jul 27, 2019, 5:56 PM IST
Highlights

சினிமா பாணியில் நான்கு பெண்களை ஏமாற்றி கல்யாணம் செய்து அவர்களுக்கு குழந்தையும் கொடுத்த கேடியை பற்றிய அதிரவைக்கும் பரபரப்பு தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

சினிமா பாணியில் நான்கு பெண்களை ஏமாற்றி கல்யாணம் செய்து அவர்களுக்கு குழந்தையும் கொடுத்த கேடியை பற்றிய அதிரவைக்கும் பரபரப்பு தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் பகுதியை சேர்ந்த கோட்டை ராஜூ என்பவருடைய மகள் கோமளாதேவி. பி.காம். பட்டதாரி. அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவந்தார். கோமளா தேவிக்கும், மாடக்கொட்டான் பகுதியை சேர்ந்த கங்காதரன் என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு கல்யாணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 10 வயதில் ஹரிதரன் என்ற மகனும், 9 வயதில் மகளும் உள்ளனர்.

கல்யாணத்துக்குப் பின்னர் துபாய்க்கு வேலைக்கு சென்ற கங்காதரன், சார்ஜாவில் அல்தரன் என்ற பெயரில் தனியார் பணிகளுக்கு ஆட்களை அனுப்பும் புரோக்கர் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து தனது மனைவியையும் துபாய்க்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அங்கு வேறு சில பெண்களுடன் ரகசியமாக  குடும்பம் நடத்தி வந்ததை தெரிந்துகொண்டு கோமளாதேவிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்ததும் கோமளா தேவியை ஊருக்கு அழைத்து வந்துள்ளார்.

பின்னர் மீண்டும் துபாய்க்கு சென்ற கங்காதரன் அவ்வப்போது ஊருக்கு வந்து மனைவி, குழந்தைகளை பார்த்து விட்டு சென்றுள்ளார். இப்படி ஒருமுறை ஊருக்கு வந்த கங்காதரன் போனுக்கு நள்ளிரவு 12 மணிக்கு மிஸ்டுகால் வந்திருந்தது. அந்த போன் நம்பரை குறித்துக்கொண்ட கோமளா அதில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். எதிர் முனையில் மற்றொரு  பெண் யாரென்று விசாரித்ததில், அவர் கங்காதரனின் மனைவி என்று கூறியதுடன், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவிக்க கோமளாவுக்கு அதிர்ச்சியாக இருந்துள்ளது.

மேலும் 2 பெண்களை கங்காதரன் கல்யாணம் செய்து தனி குடித்தனம் நடத்தி வந்ததும் தெரியவந்ததால், தன்னுடைய கணவர் மீது அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீசார் ஏற்கனவே விசாரணை செய்துள்ளனர். மேலும் இதுதொடர்பான விசாரணையின் போது, கங்காதரன் குறித்து கோமளா போலீசாரிடம் பரபரப்பான தகவல்களை கூறி இருக்கிறார். 

அதாவது, சினிமா பாணியில் பெண்களுடன் பழகியதும், பின் 4 பேரை திருமணம் செய்துகொண்டு ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவருடன் குடித்தனம் நடத்தி குழந்தை பெற்றுக்கொண்டதும் என புகைப்படங்கள் வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது; கங்காதரனுக்கும், கோமளாதேவிக்கும் திருமணம் நடந்த பின்பு, சின்ன சேலம் பகுதியை சேர்ந்த கவிதா என்ற பெண்ணை 2-வதாக கல்யாணம் செய்துள்ளார். சென்னையை சேர்ந்த யமுனா என்ற பெண்ணை 3-வது கல்யாணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், ஒருநாள் கோமளாவிடம் வந்து, தான் திருந்திவிட்டதாகவும் இப்போது மிகுந்த கடனில் சிக்கியிருப்பதால் உன்னுடைய பெயரில் இருக்கும் சொத்தினை தனக்கு எழுதி தருமாறும் கேட்டுள்ளார். இதை நம்பிய கோமளாதேவியோ திருச்செந்தூர் கோவிலுக்கு அழைத்துச்சென்று கடலில் இறங்கி சத்தியம் வாங்கியுள்ளார். அதன் பின்பு சில சொத்துக்களை கோமளாதேவி எழுதிக்கொடுத்ததாகவும் தெரியவருகிறது.

அந்த சொத்துக்களை தன் வசப்படுத்திய கங்காதரன், வெளியூர் செல்வதாக சொல்லிவிட்டு டிமிக்கி கொடுத்துள்ளார். நேராக சென்னையை சென்ற அவர் தீபா என்ற பெண்ணை சமீபத்தில் கல்யாணம்  செய்து, அவருக்கும் ஒரு குழந்தை இருப்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி கங்காதரன் தனது ரேஷன் கார்டில் கவிதா மற்றும் அவரது குழந்தையான ஸ்ரீதரன் ஆகியோர் பெயர்களை சேர்த்துள்ளார். 4-வது திருமணம் செய்த தீபா என்ற பெண்ணின் பாஸ்போர்ட்டில், வீட்டு முகவரியாக ராமநாதபுரம் மாடக்கொட்டான் முகவரியை கொடுத்ததும் தெரியவந்து இருக்கிறது.

ஒவ்வொரு பெண்ணையும் அவர்களது குடும்ப வழக்கப்படி உறவினர்கள் முன்னிலையிலேயே கங்காதரன் திருமணம் செய்துள்ளதாகவும், குறிப்பிட்ட சில காலம் வாழ்ந்துவிட்டு அவர்களுக்கு குழந்தை பிறந்தவுடன் ஆண் குழந்தை எனில் அதற்கு தன்னுடைய அடையாளமாக தரன் என முடியும் வகையில் பெயரை வைத்துவிட்டு, அடுத்த கல்யாணத்திற்கு ரெடியாகி விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதன்படி முதல் மனைவியான கோமளாதேவியின் மகனுக்கு ஹரிதரன் எனவும், 2-வது மனைவியான கவிதாவின் மகனுக்கு ஸ்ரீதரன் எனவும், 3-வது மனைவி யமுனாவின் மகனுக்கு கிரிதரன் என்றும் பெயர் வைத்துள்ளாராம். 4-வது மனைவியான தீபாவுக்கு பெண் குழந்தை என்பதால் அந்த குழந்தை.

பகட்டான தோற்றத்தில் வலம் வந்த கங்காதரனை பற்றி முழுமையாக விசாரிக்காமல் அவசரகதியில் பெண் கொடுத்ததால், அவர் விரித்த வலையில் 4 அப்பாவி சிக்கவைத்து அவர்களுக்கு குழந்தையும் கொடுத்துள்ளது போலீசார் விசாரணையின் மூலம் உறுதிபடுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் வேறு பெண் யாராவது அவரிடம் ஏமாந்து உள்ளாரா? என விசாரணையும் நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

click me!