கல்யாண ஆசை காட்டி இளம்பெண்ணை உல்லாசம் அனுபவித்த காதலன்...

By sathish kFirst Published Jul 4, 2019, 5:23 PM IST
Highlights

கல்யாண செய்துகொள்வதாக ஏமாற்றி உல்லாசம் இருந்து விட்டு திருமணத்துக்கு மறுத்த காதலன் வீட்டு முன்பு இளம் பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.
 

கல்யாண செய்துகொள்வதாக ஏமாற்றி உல்லாசம் இருந்து விட்டு திருமணத்துக்கு மறுத்த காதலன் வீட்டு முன்பு இளம் பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கூணான்டியூர் பகுதியைச்சேர்ந்தவர் ஹரிகரன், இதே கிராமத்தை சேர்ந்த ரமணி இருவரும் சேலத்தில் உள்ள  ஐ.டி.ஐ.யில் படித்த போது காதல் மலர்ந்தது. இவர்கள் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து காதலித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு 2 பேரும் திருப்பூருக்கு சென்று அங்கு ஒரே இடத்தில் தங்கி பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். அப்போது ஹரிகரன் ரமணி தங்கியிருந்த வீட்டிற்க்கே சென்று கல்யாண ஆசைக்காட்டி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். மேலும் தந்து ரூமுக்கு அழைத்து செண்டு உல்லாசமாக இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஹரிகரனிடம் ரமணி தன்னை கல்யாணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார். இதற்கு சம்மதம் தெரிவித்த ஹரிகரன் கல்யாணம் செய்துகொள்ள ஆதார்கார்டை எடுத்து வருகிறேன் என சொல்லிவிட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார் ஆனால், அவர் திரும்பவும் திருப்பூர் செல்லவில்லை. இதனால் ஏமார்ந்துப்போன ரமணி ஹரிகரனை தொடர்பு கொண்டு கல்யாணம் செய்து கொள்ளுமாறு கூறினார். ஆனால் அதற்கு ஹரிகரன் மறுத்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த ரமணி நேற்றிரவு மேச்சேரி வந்து காதலன் ஹரிகரன் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் ஹரிகரன் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டனர். பூட்டிய வீட்டின் முன்பு அமர்ந்து ரமணி தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் அங்கு வந்து ரமணியிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஹரிகரன் தன்னை திருமணம் செய்யும் வரை இங்கிருந்து செல்லமாட்டேன் என சொல்லி அழுதுள்ளார்.

போலீசார் அவரை சமாதானம் செய்து இரவு 10 மணிக்கு அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இன்று காலை ரமணி மீண்டும் காதலன் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் மண் எண்ணை கேனும் எடுத்து வந்துள்ளார். ஹரிகரன் தன்னை கல்யாணம் செய்துகொள்ளும்வரை போராட்டத்தை கைவிட மாட்டேன் என அவர் மறுத்தால் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்வேன் என தர்ணா செய்துவரும் ரமணியிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

click me!