இதற்காக தான் அந்த பெண்ணை துடிதுடிக்க கொன்றேன்.. கைததான வாலிபர் பகீர் வாக்குமூலம்..!

By vinoth kumarFirst Published Jun 21, 2022, 11:57 AM IST
Highlights

சம்பள பாக்கியை பலமுறை கேட்டும்  சண்முகம் தர மறுத்துவிட்டார். இதனால் அவரது வீட்டிற்கு சென்று அவரது தாய் மல்லிகாவிடம் உங்களது மகன் சம்பள பணத்தை தரவில்லை. நீங்களாவது பணத்தை தாருங்கள். இல்லையென்றால் உங்களது மகனிடம் பணத்தை தர சொல்லுங்கள் என்றேன்.

சம்பள பாக்கி தராததால் விரக்தியில் இருந்த என்னிடம் மல்லிகா தரக்குறைவாக பேசியதால் ஆத்திரத்தில் கட்டையால் அடித்து கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அடுத்த கருந்தேவன்பாளையத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (60). இவருடைய மனைவி மல்லிகா (55). இவர்களுக்கு சண்முகம் (30) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சண்முகம் கோவையில் கிரீல் கேட் அமைக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது வீட்டின் எதிர்வீட்டை சேர்ந்தவர் சின்ராசு (28). கூலி தொழிலாளி.  இவரை, சண்முகம் கோவையில் உள்ள தனது கிரீல் கேட் தயாரிக்கும் கம்பெனிக்கு வேலைக்கு அழைத்து சென்றார். இந்நிலையில், அங்கு சின்ராசு, ஒரு மாதமே வேலை பார்த்த நிலையில் திடீரென வேலையில் இருந்து நின்று விட்டார். அப்போது அவருக்கு வழங்க வேண்டிய சம்பளம் பணம் பாக்கி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த பணத்தை தருமாறு சண்முகத்திடம் சின்ராசு கேட்டு வந்தார். ஆனால், அவர் கொடுக்கவில்லை. இதனால் பணத்தை கேட்க அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கிருந்த அவரது தாயார் மல்லிகாவுக்கும், சின்ராசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த சின்ராசு, அங்கு கிடந்த கட்டையை எடுத்து மல்லிகாவை அடித்தார். இதில், ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த மல்லிகா மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மல்லிகா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்ராசை கைது செய்தனர். கைதான அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், சம்பள பாக்கியை பலமுறை கேட்டும்  சண்முகம் தர மறுத்துவிட்டார். இதனால் அவரது வீட்டிற்கு சென்று அவரது தாய் மல்லிகாவிடம் உங்களது மகன் சம்பள பணத்தை தரவில்லை. நீங்களாவது பணத்தை தாருங்கள். இல்லையென்றால் உங்களது மகனிடம் பணத்தை தர சொல்லுங்கள் என்றேன். அப்போது மல்லிகா பணம் கேட்டு வீட்டு பக்கம் வராதே சத்தம் போட்டு தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சின்ராசு மல்லிகாவை கட்டையால் அடித்து கொன்றதாக கூறியுள்ளார். இதையடுத்து கைதான சின்ராசை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டார். 

click me!