கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்த பெண்... தொல்லை செய்த மகனை அடித்தே கொன்ற கொடுமை!! அம்பத்தூரில் பரபரப்பு..

By sathish kFirst Published May 21, 2019, 4:10 PM IST
Highlights

கள்ளக்காதலனோடு உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருந்ததால் இருந்ததால் 3 வயது மகன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் மற்றும் அவரது காதலனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கள்ளக்காதலனோடு உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருந்ததால் இருந்ததால் 3 வயது மகன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் மற்றும் அவரது காதலனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அய்யப்பன் நகரை சேர்ந்த கார்த்திகேயன், மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு கிஷோர் என்ற 3-வது மகன் உள்ளார். புவனேஸ்வரிக்கும் அதே பகுதியை சேர்ந்த சோமசுந்தரத்துக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதுபற்றி தெரிந்த கணவன் கார்த்திகேயன் மனைவியை கடுமையாக கண்டித்தார்.

இதனால் கடுப்பான மனைவி புவனேஸ்வரி, கள்ளகாதலனோடு சுந்தரத்துடன் அம்பத்தூர் பகுதியில் வீடு வாடகை எடுத்து, கணவனின் தொல்லை இல்லாமல் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மகன் கிஷோர் வீட்டு மாடிப்படியில் இருந்து கீழே விழுந்ததில் அடிபட்டு இறந்துவிட்டதாக பெருந்துறையில் உள்ள மாமியாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் மகன் உடலை இறுதிச்சடங்கு செய்வதற்காக பட்டுக்கோட்டையில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு புவனேஸ்வரி கொண்டு சென்றார். புவனேஸ்வரியின் பேச்சில் சந்தேகம் அடைந்த அவரது அக்கா போலீசுக்கு தகவல் தெரிவித்தார். 

இதுபற்றி பட்டுக்கோட்டை போலீசார் அம்பத்தூர் உதவி கமி‌ஷனர் கண்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் பட்டுக்கோட்டை சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக சென்னை கொண்டு வந்தனர். அவனது உடல் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

சிறுவனின் தலையில் காயம் இருப்பதால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இதுதொடர்பாக புவனேஸ்வரி, அவரது காதலன் சோமசுந்தரம் ஆகியோரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் இருவரும் சேர்ந்தே கொலை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. 

புவனேஸ்வரியும், சுந்தரமும் கடந்த 4 மாதத்துக்கு முன்புதான் மேனாம்பேடு பகுதிக்கு குடிவந்துள்ளனர். அப்போது முதலே சிறுவன் கிஷோரை சோமசுந்தரம் அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சிறுவன் கொலை செய்யப்பட்டு இருப்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.  

click me!