கொலை செய்த தூக்கில் தொங்கவிடப்பட்ட புதுப் பெண் !! காதல் கணவனே செய்த கொடூர செயல் !!

By Selvanayagam PFirst Published Jun 24, 2019, 7:32 AM IST
Highlights

ஒரத்தநாடு அருகே காதல் திருமணம் செய்த புது மணப் பெண்ணை  அவரது கணவனே கொலை செய்து தூஙககஙல தொங்கவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை அடுத்த குச்சிபாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார் .  இவரும் குணசுந்தரி  என்பவரும் காதலித்து வந்தனர்.  இதற்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தால், அப்பகுதிதயில் உள்ள கோவிலில்  கடந்த மாதம் அவர்கள் திருஅணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து அவர்கள் இருவரும் 20 நாட்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்த நெய்வாசல் சமத்துவபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து அங்கு வசித்து வந்தனர்.

இந்த நிலையில் குடும்ப பிரச்சினை தொடர்பாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று  குணசுந்தரி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி ஒரத்தநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், குணசுந்தரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலை மறைவான சிவக்குமாரை தேடி வருகிறார்கள்.

குணசுந்தரி சாவில் மர்மம் நிலவுவதால் அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டாரா? அல்லது தற்கொலைக்கு தூண்டினாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணமான ஒரு மாதத்துக்குள் புதுப்பெண் மர்மமான முறையில் இறந்ததால் ஆர்.டி.ஓ. சுரேசும் மேல் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

click me!