ஆடையில்லாமல் கொடூரமாக இளம்பெண் கூட்டு பலாத்காரம்... வெறி தீராததால் தலையில் கல்லை போட்டு படுகொலை..!

By vinoth kumarFirst Published Mar 18, 2020, 6:09 PM IST
Highlights

தெலங்கானாவில் மீண்டும் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் அருகே உள்ள தங்கடி பள்ளி கிராம காட்டுப்பகுதியில் இளம் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். வலி தாங்க முடியாமல் கதறிய பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்த பாலத்துக்கு அடியில் உடலை போட்டுவிட்டு தப்பியுள்ளனர்.

தெலங்கானாவில் வெறி தீர கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு தலையில் கல்லை போட்டு கொடூரமாக முகம் சிதைக்கப்பட்டு பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஐதராபாத்தைச் சேர்ந்த அரசு பெண் மருத்துவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டது நாட்டையே உலுக்கியது. இது தொடர்பான வழக்கில் குற்றவாளிகளை போலீசார் என்கவுண்டர் செய்தனர். இந்நிலையில், தெலங்கானாவில் மீண்டும் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் அருகே உள்ள தங்கடி பள்ளி கிராம காட்டுப்பகுதியில் இளம் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். வலி தாங்க முடியாமல் கதறிய பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்த பாலத்துக்கு அடியில் உடலை போட்டுவிட்டு தப்பியுள்ளனர்.

பாலத்துக்கு அடியில் கிடந்த சடலத்தை பார்த்த அப்பகுதி கிராம மக்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனையிட்டனர். மேலும், கை ரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த நபர்களை பிடிப்பதற்காக 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

click me!