என்னுடை தாலி அறுந்தாலும் பரவாயில்ல; செத்து போடா.. டார்ச்சர் செய்த கணவனை துடிதுடிக்க கொன்ற மனைவி; நடந்தது என்ன?

Published : Aug 01, 2023, 02:32 PM ISTUpdated : Aug 01, 2023, 02:34 PM IST
என்னுடை தாலி அறுந்தாலும் பரவாயில்ல; செத்து போடா.. டார்ச்சர் செய்த கணவனை துடிதுடிக்க கொன்ற மனைவி; நடந்தது என்ன?

சுருக்கம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள புதூர் நஞ்சியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலு (63). இவரது மனைவி ஈஸ்வரி (58). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும்  திருமணமாகி கணவருடன் வசித்து வருகின்றனர். 

தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்த கணவரை மனைவியே சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள புதூர் நஞ்சியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலு (63). இவரது மனைவி ஈஸ்வரி (58). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும்  திருமணமாகி கணவருடன் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்துள்ள நாமக்கல்பாளையத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டுக்கு வசித்து வந்தனர். பாலு அப்பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலை செய்து வந்தார். மதுவுக்கு அடிமையான பாலு தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி ஈஸ்வரியிடம் தகராறு செய்து அடித்து உதைத்து வந்துள்ளார். 

இதையும் படிங்க;- கல்யாணம் பண்ணி 10 நாள் கூட ஆகல.. அதுக்குள்ள என் புருஷனை இப்படி கொன்னுட்டாங்களே.. கதறும் காதல் மனைவி.!

இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம் போல இரவு போதையில் வீட்டுக்கு வந்த பாலு ஈஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஈஸ்வரி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தாலி கட்டிய கணவர் என்று கூட பாராமல் பாலுவை சரமாரியாக வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த பாலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பாலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க;-  Encounter Tamil Nadu: சென்னை அருகே இரண்டு ரவுடிகள் என்கவுண்டர் சுட்டுக்கொலை.. நடந்தது என்ன? பரபரப்பு தகவல்..!

இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று இரவு ஈஸ்வரியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தினமும் குடிபோதையில் வந்து அடித்து உதைத்ததால் கொலை செய்ததாக கூறினார். 

PREV
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!