குடிகாரக் கணவன்!! கள்ளக்காதலனோடு உல்லாசம்... இடைஞ்சலாக குழந்தை... வெறித்தனமாக கொன்று புதைத்தது அம்பலம்

By sathish kFirst Published May 19, 2019, 12:26 PM IST
Highlights

நண்பனின் மனைவி மீது உள்ள மோகத்தால், அவரது மனைவியை வைத்தே  கணவனையும், குழந்தையையும் கொடூரமாக கொன்றுப் புதைத்து அம்பலமாகியிருக்கிறது, இதற்கு கள்ளக்காதலன் உதவியது தெரியவந்துள்ளது.

ஆற்காடு அருகே கணவர் மற்றும் குழந்தையை கொலை செய்து புதைத்த காதல் மனைவி மற்றும் கள்ளக்காதலன் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

வேலூர் மாவட்டம், திமிரி அடுத்த பாடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி நிர்மலா. இவர்களது மகன் ராஜா எலக்ட்ரீஷியன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ராஜா, சாத்தூர் மந்தைவெளி தெருவை சேர்ந்த பெருமாள், விஜய் தம்பதியரின் மகள் தீபிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரவீன்குமார் என்ற மகன் உள்ளான். கடந்த 13-ம் தேதி முதல் ராஜாவும், பிரவீன்குமாரும் காணாமல் போனார்கள். இதுகுறித்து தீபிகா அங்குள்ளவர்களிடம் கூறி உள்ளார். இந்த தகவல் ராஜாவின் சகோதரிகளுக்கு தெரியவந்தது. உடனே ராஜா வீட்டுக்கு வந்து தீபிகாவிடம் விசாரித்தனர். வீட்டில் ரத்தக்கறை போல இருக்கிறதே என கேட்டுள்ளனர். 

அதற்கு தீபிகா முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். இதனையடுத்து அவரது சகோதரர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீபிகாவிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. கணவர் ராஜா குடித்துவிட்டு அடிக்கடி என்னிடம் தகராறு ஈடுபட்டார். 

இதனால் விரக்தி அடைந்த நான் கடந்த 12-ம் தேதி இரவு கணவர் உறங்கிக் கொண்டிருந்த தனது காதல் கணவர் ராஜாவை தலையில் கல்லைப் போட்டும், குழந்தை பிரனீஷைக் கழுத்தை நெரித்தும் கொலை செய்தததாக கைது செய்யப்பட்டார்.  அன்றாடம் மது அருந்தி விட்டு தன்னைக் கொடுமைப்படுத்தியதால் கணவரைக் கொன்றதாகவும், கொலைகாரியின் மகன் என்று ஊர் பேசக் கூடாது என்பதற்காக குழந்தையையும் கொன்றதாக போலீசிடம் தீபிகா தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் கணவரின் மீதான ஆத்திரத்தில் ஆடைகள் மற்றும் ஆதார் கார்டு, பேங்க் பாஸ்புக் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை தீபிகா எரித்துள்ளார். 

இந்நிலையில், போலீசாருக்கு மேலும் சந்தேகம் வலுத்துள்ளது. அதாவது வீட்டில் இருந்து 30 அடி தூரத்தில் பிணங்கள் புதைக்கப்பட்டுள்ளது. தீபிகா தனியாகஇதை செய்திருக்க வாய்ப்பில்லை. அதுமட்டுமல்ல புதைக்கப்பட்ட இந்த பள்ளம் ஏற்கனவே தோண்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கொலை சம்பவத்தில் தீபிகாவுக்கு யாரோ உடந்தையாக இருந்ததாக போலீசார் சந்தேகித்ததால் துருவித் துருவி விசாரித்ததில், கணவர் ராஜாவின் நண்பர்  தாஜ்புரா சத்யா நகரைச் சேர்ந்த ஆட்டோ ராஜ் என்ற ஜெயராஜ் உதவியதும், தீபிகா மீதி இருந்த பலான உறவால் இப்படி செய்தது தெரிகிறது.

இவர்களுக்கு கள்ளஉறவு வந்தது எப்படி?

குடி போதையில் மனைவி தீபிகாவிடம் ராஜா சண்டையிடும் போதெல்லாம், அவரது நண்பர் தாஜ்புரா சத்யா நகரைச் சேர்ந்த ஆட்டோ ஜெயராஜ் வீட்டிற்க்கே வந்து பிரச்சனையை தீர்த்து வைத்து வந்ததாகக் சொல்லபப்டுகிறது. இதனால் தீபிகாவுடன், ஜெயராஜூக்கு நெருக்கம் அதிகரித்து, கணவன் இல்லாத நேரத்தில் இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். தங்களது உல்லாச வாழ்க்கைக்கு கணவன் இடையூறாக இருப்பதாலும், குழந்தை மட்டுமே வீட்டில் இருப்பதால் இடைஞ்சலாக இருக்கும் என்பதால் கணவனையும், குழந்தையையும் கொலை செய்து விட்டு, ஜெயராஜ் மூலம் சடலங்களை அப்புறப்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை அடுத்து ஜெயராஜையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

click me!