கட்டிலில் கட்டிப்பிடித்து கள்ளக்காதலனுடன் முரட்டுத்தனமாக மனைவி உல்லாசம்... நேரில் பார்த்த கணவர் விபரீத முடிவு

Published : Feb 23, 2020, 11:57 AM ISTUpdated : Feb 23, 2020, 12:22 PM IST
கட்டிலில் கட்டிப்பிடித்து கள்ளக்காதலனுடன் முரட்டுத்தனமாக மனைவி உல்லாசம்... நேரில் பார்த்த கணவர் விபரீத முடிவு

சுருக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள பஸ்தலப்பள்ளி அடுத்த தொட்டேஅள்ளியை சேர்ந்தவர் சீனிவாசன் (30). இவர் தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் கொத்தூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி (27) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள கட்டிட தொழிலாளி முரளி (35) என்பவருக்கும், சீனிவாசன் மனைவி லட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் வெளியே சென்ற நேரத்தில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர்.

கிருஷ்ணகிரி அருகே மருமகளுடன் கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்த நபரை அவரது மாமனார் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள பஸ்தலப்பள்ளி அடுத்த தொட்டேஅள்ளியை சேர்ந்தவர் சீனிவாசன் (30). இவர் தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் கொத்தூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி (27) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள கட்டிட தொழிலாளி முரளி (35) என்பவருக்கும், சீனிவாசன் மனைவி லட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் வெளியே சென்ற நேரத்தில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர். 

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சீனிவாசன் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது முரளியும், லட்சுமியும் கட்டிலில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை நேரில் பார்த்த சீனிவாசன் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை ரத்த காயங்களுடன் முரளி இறந்து கிடந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது முரளியை கட்டையால் அடித்து கொன்றதாக சீனிவாசனின் தந்தை போலீசில் சரணடைந்தார். 

இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தியதில் தனது மருமகள் லட்சுமியுடன் முரளி கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இதுகுறித்து தகவலறிந்த சீனிவாசன் இருவரையும் பலமுறை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்கள் கள்ளக்காதலை கைவிடாததால் மனமுடைந்து மகன் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, லட்சுமி கொத்தூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றும் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். பின்னர், மகன் தற்கொலைக்கு முக்கிய காரணமாக இருந்த முரளியை கொலை செய்ததாக கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி