அடங்காத மனைவி: நள்ளிரவில் உச்சகட்ட வெறி.. அந்தரங்க உறுப்பை கரகரவென அறுத்து கொடூரம்.

By Ezhilarasan BabuFirst Published Aug 9, 2021, 4:17 PM IST
Highlights

முன்னதாக, தனது மனைவிக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாகவும், அவரது தாய் மாமா குவால்தோலி, புல்வாரியில் இருப்பதாகவும் கூறினார். அவருக்கு ஏற்கனவே 5 குழந்தைகள் இருந்தன, அதில் 3 குழந்தைகள் சந்தேகத்திற்கிடமான நிலையில் இறந்தனர். இப்போது மேலும் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளது. எங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. 

பீகார் மாநிலம் பாட்னாவில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், மனைவி கணவனின் ஆணுறுப்பை அறுத்தெறிந்துள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதில் கணவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாறிவரும் கலாச்சாரம், பொருளாதாரச்சூழல் காரணமாக கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு அதனால் ஏற்படும் விவாகரத்து போன்றவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நிதானம், சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல் போன்றவை இளம் தலைமுறையினர் மத்தியில் அறவே இல்லை என்றும் சொல்லும் அளவிற்கு குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இதில் கணவன் மனைவியை தாக்குவது, மனைவி கணவனை தாக்குவது போன்ற நிம்மதி இல்லா சுழல் பல குடுபங்களில் அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு சிறிய சண்டைக்காக மனைவி கணவணின் ஆணுறுப்பை அறுத்துள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிகொள்ள வைத்துள்ளது. 

பீகார் தலைநகர் பாட்னாவில் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது, அப்போது மனைவியை கணவன் அடித்ததால், ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற மனைவி, அப்போதைக்கு தன் கோபத்தை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை, ஆனால் இரவுக்குள் கணவனை பழிவாங்க முடிவு செய்தார். பின்னர் இருவரும் சாப்பிட்டு உறங்க சென்று விட்டனர். கனவன் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றுவிட்டார் ஆனால் தூங்காமல் கணவனை பழிவாங்க காத்திருந்த மனைவி, முன்கூட்டியே கணவனுக்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். அதனால் மயங்கி ஆழ்ந்த உரக்கத்திற்கு சென்ற கணவனை, மனைவி  நள்ளிரவில் பிளேடால் கணவனின் ஆணுறுப்பை கறகறவென அறுதார்.  மயக்கத்தில் இருந்தாலும் திடீரென வலி தாங்க முடியாமல் கணவர் அலறினான். பின்னர் எழுந்து பார்த்தபோது தனது  ஆணுறுப்பு மனைவியால் அறுக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கூச்சலிட்டு அலறினார். அதை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். 

பின்னர் பொறுமை இழந்த அவர் பதிலிக்கு மனைவியை கடுமையாக தாக்கினார். அதில் மீண்டும் மனைவி பலத்த காயம் அடைந்தார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் காவல் நிலையம் சென்று தனக்கு நேர்ந்தது குறித்து போலீசிடம் கூறினார். ஆனால் அவரது நிலைமையை கண்ட போலீசார், அவரை உடனேயாக மருத்துவமனைக்கு செல்லுமாறு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் அவரிடம் புகார் பொற்றுக் கொண்ட போலீசார், அவரது வீட்டிற்கு அருகில் உள்ள அக்கம்பக்கத்தினருடன்  நடந்தவை குறித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். மொத்தத்தில் மனைவி கணவரின் அந்தரங்க உறுப்ப அறுத்துள்ளது உள்ளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக, தனது மனைவிக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாகவும், அவரது தாய் மாமா குவால்தோலி, புல்வாரியில் இருப்பதாகவும் கூறினார். அவருக்கு ஏற்கனவே 5 குழந்தைகள் இருந்தன, அதில் 3 குழந்தைகள் சந்தேகத்திற்கிடமான நிலையில் இறந்தனர். இப்போது மேலும் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளது. எங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு எங்களுக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஆகஸ்ட் 7 ஆம் தேதி இரவு, வீட்டுத் தகராறில் மனைவி தன்னை இப்படி கொடுரமாக அறுத்துவிட்டார் எனவும்,  முதலில் மனைவி தனக்கு விஷம் கொடுத்தார், தான் மயக்கமடையத் தொடங்கியபோது, ​​அவர் பிறப்புறுப்பை அறுத்தார் என கணவன் வாக்குமூலம் கொடுத்துள்ளது குறிப்பிடதக்கது. 
 

click me!