கணவரை கொலை செய்தது ஏன்? கள்ளக்காதலனுடன் மனைவி பகீர் வாக்குமூலம்

By sathish kFirst Published Nov 20, 2018, 11:47 AM IST
Highlights

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவியை கள்ளக்காதலனுடன் போலீசார் கைது செய்தனர். கணவரை கொலை செய்தது ஏன்? என்பது பற்றி மனைவி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சேலம் அருகே கருப்பூர் உப்புகிணறு பார்வதி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 38). இவர், அதே பகுதியில் உள்ள ஒரு கிரானைட் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி ஐஸ்வர்யா (வயது 26). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதனிடையே, கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 10-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற செல்வகுமார் திடீரென மாயமானதாகவும், அவரை கண்டுபிடித்து தருமாறும் கருப்பூர் போலீஸ் நிலையத்தில் ஐஸ்வர்யா ஒரு புகார் மனு அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்தநிலையில், நேற்று முன்தினம் செல்வகுமாரின் வீடு அருகே உள்ள விவசாய கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள், கிணற்றுக்குள் எட்டி பார்த்தபோது, அங்கு செல்வகுமார் இறந்தநிலையில் சடலமாக மிதப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த கருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் அங்கப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்வகுமார் கொலை செய்யப்பட்டு அவரது சடலத்தை கிணற்றில் வீசியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரது மனைவி ஐஸ்வர்யாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, ஐஸ்வர்யா, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து செல்வகுமாரை கொலை செய்து கிணற்றில் உடலை வீசியது தெரிய வந்தது.

இதையடுத்து ஐஸ்வர்யா மற்றும் அவரது கள்ளக்காதலன் ரவி ஆகியோரை பிடித்து நேற்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, கணவர் செல்வக்குமாரை கொலை செய்தது ஏன் என்பது குறித்து போலீசாரிடம் ஐஸ்வர்யா வாக்குமூலம் அளித்தார்.

அதில்; நான் கடந்த 10-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தேன். அப்போது, மதியம் 12 மணிக்கு கருப்பூர் கரும்பாலையை சேர்ந்த ரவி என்பவர் வீட்டிற்கு வந்தார். எனக்கும், அவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததால் இருவரும் வீட்டில் பேசிக்கொண்டு இருந்தோம். அந்த சமயத்தில் எனது கணவர் செல்வகுமார் வீட்டிற்கு வந்துவிட்டார். அப்போது, இருவரையும் ஒன்றாக பார்த்ததால் ஏன்? இப்படி செய்கிறாய் என்று என்னிடம் தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் எங்களுக்குள் பயங்கர சண்டை நடந்தது.

மேலும், என்னை அடித்து துன்புறுத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான், வீட்டில் இருந்த தோசைகல்லை எடுத்து கணவரை அடித்து தாக்கினேன். அப்போது, ரவியும் உறுதுணையாக இருந்தார். பிறகு ரத்த வெள்ளத்தில் செல்வகுமார் மயங்கி விழுந்தார். இதையடுத்து கள்ளக்காதலன் ரவியும், நானும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டோம். அதன்பிறகு நான் எனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டேன். இதைத்தொடர்ந்து அன்றைய தினம் நள்ளிரவு மீண்டும் வீட்டிற்கு வந்தோம். அப்போது, கணவர் இறந்துவிட்டதை அறிந்தவுடன், அவரின் உடலை யாருக்கும் தெரியாமல் அருகில் இருந்த கிணற்றில் வீசினோம்.

பின்னர், யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க அக்கம் பக்கத்திலும், உறவினர்கள் வீடுகளிலும் தேடுவது போல் நாடகம் ஆடினேன். அந்த சமயத்தில் எனது மாமனார், மாமியார் என்னிடம் வந்து மகன் செல்வகுமார் எங்கே? என்று அடிக்கடி கேட்டு வந்தார்கள். மேலும், போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்போவதாகவும் தெரிவித்தனர். இதனால் எனக்கு பயம் ஏற்பட்டது.

போலீசுக்கு சென்றால் எப்படியும் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் அவர்கள் செல்வதற்கு முன்பே நான், கருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று கணவரை காணவில்லை என்று புகார் மனு அளித்தேன் என இவ்வாறு கூறினார்.இதையடுத்து நேற்று இரவு ஐஸ்வர்யா மற்றும் அவரது கள்ளக்காதலன் ரவி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

click me!