சென்னையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை... கதறும் 7 மாத கர்ப்பிணி மனைவி..!

By vinoth kumarFirst Published Sep 3, 2019, 3:54 PM IST
Highlights

சென்னையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் 5 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் 5 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் தணிகாச்சலம். இவரது மூன்றாவது மகன் கோகுல் என்கின்ற கோகுல்நாத் (23). இவருக்கு திருமணமாகி மீனா என்கின்ற மனைவி உள்ளார். மீனா தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. கோகுல்ராஜூக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜையா என்பவருக்கும் தகராறு இருந்து வந்தது. அவரை கோகுல்ராஜ் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், நேற்று இரவு 10.30 மணிக்கு கோகுல்ராஜ் வியாசர்பாடி, கல்யாணபுரம் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, 3 இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவரை சுற்றி வளைத்தது. இதனையடுத்து, அந்த கும்பல் கோகுல்ராஜை சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கோகுல்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே வியாசர்பாடியில் தொடர் கொலைகள் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது. 

click me!