வீட்டில் தனியாக இருந்த அண்ணி...!! வேலைக்கு லீவு போட்டு வந்த கொழுந்தன்... இருவருக்கும் இடையே நடந்த பயங்கரம்..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 7, 2019, 4:42 PM IST
Highlights

இந்நிலையில் ஆறுமுகம்  திடீரென தன் அண்ணன் மனைவி சிவகாமியை இரும்பு கம்பியால் தலையில் பலமாக தாக்கினார்.  அதில் நிலைகுலைந்த சிவகாமி  அலறியபடி ரத்தவெள்ளத்தில் சரிந்தார்.  சிவகாமியின் அலாரம் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர் .ஆனால்  சிவகாமி சுய நினைவின்றி  ரத்தவெள்ளத்தில்  கிடப்பதை கண்டு அவரை உளுந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். 

அண்ணியை   இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு கொழுந்தனும்  தூக்கில் தொங்கிய சம்பவம் விருதாச்சலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே எடச்சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சின்னசாமி, சரோஜா தம்பதியர்,  அவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.  இரண்டு மகன்களுக்கு ஏற்கனவே திருமணமாகி உள்ள நிலையில் கடைசி மகன் ஆறுமுகம் கேரளாவில் வேலைசெய்து வருகிறார். இந்நிலையில்  விடுமுறை காரணமாக வீட்டுக்கு வந்துள்ள அவர் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில்  அனைவரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வரும் நிலையில்,  ஆறுமுகத்தின் இரண்டாவது அண்ணன்  குழந்தைவேலு தனது மனைவி சிவகாமியை வீட்டில் விட்டு,  விவசாய வேலைக்கு சென்றுவிட்டார். அதனால் சிவகாமியும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் ஆறுமுகம்  திடீரென தன் அண்ணன் மனைவி சிவகாமியை இரும்பு கம்பியால் தலையில் பலமாக தாக்கினார்.  அதில் நிலைகுலைந்த சிவகாமி  அலறியபடி ரத்தவெள்ளத்தில் சரிந்தார்.  சிவகாமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர் .ஆனால்  சிவகாமி சுய நினைவின்றி  ரத்தவெள்ளத்தில்  கிடப்பதை கண்டு அவரை உளுந்தூர் பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.  அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து  விட்டதாக தெரிவித்தனர்.  இதனையடுத்து அண்ணி இறந்ததை  தெரிந்த கொழுந்தன் ஆறுமுகம் வீட்டுக்குள் சென்று துணியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைகண்ட அப்பகுதி மக்கள் மங்கலம்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே விரைந்து வந்த போலீசார் ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் . இந்த  கொலைக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை இந்நிலையில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொழுந்தன் அண்ணி அடித்துக் கொலை செய்ததும்  பிறகு அண்ணி இறந்ததையறித்து  கொழுந்தன்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் விருதாச்சலத்தில் மிகுந்த அதிர்ச்சியையும்,  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 

click me!