தீராத பகை ஆறாத ரணம்...!! ஊர் நாட்டான்மையை நடுத்தெருவில் வைத்து போட்டுத்தள்ளிய கொலைவெறி கும்பல்...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 29, 2020, 12:21 PM IST
Highlights

அப்போது அங்கு திரண்ட ஊர் பொதுமக்கள் குற்றவாலிகளை கைது செய்யும் வரை  உடலை எடுக்கவிடமாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர் . 

இராஜபாளையம் அருகே தேசிகாபுரம் பகுதியில் ஊர் நாட்டாமை வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது  உடலை எடுக்கவிடாமல் ஊர் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால்  பரபரப்பு ஏற்பட்டது .   விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தேசிகாபுரம் பகுதியில் மேல தெருவை சேர்ந்த பாலசுப்பு என்பவரின் மகன் தங்கவேல் வயது ( 57)  இவர் தேசிகாபுரம் வடக்குத்தெரு ஊர் நாட்டாமை ஆவார் .  கடந்த சில வருடங்களாகவே தேசிகாபுரத்தில் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இரு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர் . 

இந்நிலையில்  நேற்று மாலை தங்கவேல் ,  வீட்டிற்கு அருகே உள்ள தனது நிலத்தில்  விவசாய வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்,  தேசியம்மன்  கோவில் அருகே வந்தபோது ,  எதிரில் வந்த  அடையாளம் தெரியாத மர்மகும்பல் தங்கவேலை சுற்று வளைத்து  தாங்கள் வைத்திருந்த   பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக  வெட்டினர். அதை இடத்தில்  ரத்த வெள்ளத்தில் சரிந்த தங்கவேல் துடிதுடித்து உயிரிழந்தார்.  இதனையடுத்து தகவல் அறிந்து வந்த   தளவாய்புரம் போலீஸ்சார் , வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயற்சி செய்தனர் .   அப்போது அங்கு திரண்ட ஊர் பொதுமக்கள் குற்றவாலிகளை கைது செய்யும் வரை  உடலை எடுக்கவிடமாட்டோம் என கூறி போராட்டத்தில்  ஈடுபட்டனர் . 

அங்கு வந்த  ஏடிஎஸ்பி மாரிராஜன் மற்றும் ராஜபாளையம் டிஎஸ்பி நாகசங்கர்   குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதாக  உறுதியளித்தார் , அதன்பின்னரே  உடலை எடுத்துச் செல்ல உறவினர்களும் பொதுமக்களும் ஒத்துழைப்பு அளித்தனர் .  இந்நிலையில் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார்,   கொலையாளிகளை தேடும் பணியில் தீவிரமான ஈருபட்டு வருகின்றனர் . முன்பகை  காரணமாகவும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும்  கொலை நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிட தக்கது.  

click me!