நாங்க 20 பேரும் வெறும் 100 பெண்களுடன் மட்டும் தான் ... அவன் தனியாகவே 60 பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ வைத்திருந்தான்...

By sathish kFirst Published Mar 16, 2019, 12:49 PM IST
Highlights

சிபிசிஐடி போலீசார் திருநாவுக்கரசை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளது, அதில், சபரிராஜன் தனியாகவே 60 பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோக்களை வைத்திருந்தான் அவனை அடித்து உதைத்து அந்த பெண்களுடன் உல்லாசம் அனுபவித்தோம்.  

சிபிசிஐடி போலீசார் திருநாவுக்கரசை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளது, அதில், சபரிராஜன் தனியாகவே 60 பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோக்களை வைத்திருந்தான் அவனை அடித்து உதைத்து அந்த பெண்களுடன் உல்லாசம் அனுபவித்தோம்.  

திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தில்; பார் நாகராஜ் இருக்கும் தைரியத்தில் பல்வேறு செயல்களில் ஈடுபட்ட நாங்கள் பெண்களுடன் உல்லாசமாக இருக்க விரும்பினோம். இதனால் நாங்கள் போலியான பெயரில் குறிப்பாக பெண்களின் பெயரில் போலியான பேஸ்புக் கணக்கு தொடங்கி, பேச ஆரம்பித்தோம். 

பார் நாகராஜ் இருக்கும் தைரியத்தில் ஏராளமான பெண்களை  வலையில் வீழ்த்தி, அவர்களை மிரட்டி வரவழைத்து உல்லாசமாக இருந்து அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்தோம். இதை நாங்கள் தொழிலாகவே செய்து வந்தோம். அதில் பணமும் அதிகமாக கிடைத்தது. நாங்கள் செய்வதைப் போலவே, எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் சபரிராஜனும், பெண்களை தங்கள் வலையில் வீழ்த்தி உல்லாமாக இருந்து வந்தது வந்துள்ளார். இந்த தகவல் எனது நண்பர் எங்களிடம் சொன்னான். 

அவனை நாங்கள் வீட்டிற்க்கே சென்று, காரில் தூக்கி வந்து, அடித்து உதைத்து அவரிடம் இருந்த 2 செல்போன்களை வாங்கி  அதில் இருந்த வீடியோக்களை பார்த்தோம். நாங்கள் 20 பேரும் சேர்ந்து 100க்கும் மேற்பட்ட பெண்களுடன், மாணவிகளுடன் உல்லாசமாக இருந்துள்ளோம். ஆனால் அவன் தனியாகவே 60 பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோக்களை வைத்திருந்தான். 

அதை நாங்கள் எங்களது செல்போனுக்கு மாற்றிக் கொண்டோம். பின்னர் அதில் ஒவ்வொரு பெண்களாக தேர்ந்தெடுத்து, அவருக்கு எங்கள் முன்பு சபரிராஜனை பேசச் சொல்வோம். அவரும் பேசுவார். அந்த பெண்களை எங்கள் பண்ணை வீட்டுக்கு அழைத்து வந்தவுடன், நாங்கள் இந்த வீடியோவை காட்டி எங்களுடன் உல்லாசமாக இருக்கச் செல்வோம் கடந்த 8 மாதத்துக்கு முன்னர், ஒரு பெண்ணை மிரட்டி பண்ணை வீட்டில், நான் எனது நண்பர்கள் 4 பேரும் உல்லாசமாக இருந்தோம். 

அந்த சமயத்தில் தான் அந்த பெண்ணின் அண்ணன் எங்களை தாக்கி, செல்போனில் இருந்த 100க்கும் மேற்பட்ட வீடியோக்களை டெலிட் செய்து விட்டு, எங்கள் மீது புகார் கொடுத்தார். போலீசார் எங்களுக்கு சப்போட்டாக இருந்ததால் எங்களை கண்டுகொள்ளவில்லை. அதுமட்டுமல்ல புகார் கொடுத்தவர்களை போலீசார் சமாதான பஞ்சாயத்து பேசி அனுப்பி விட்டனர். இந்த பஞ்சாயத்தை பார் நாகராஜ்தான் செய்தார் இவ்வாறு கூறியுள்ளார்.

click me!