அடங்காத கணவன், இரவெல்லாம் வேற மாதிரி செ*** டார்ச்சர்.. ஆணுறுப்பை சதக்கென வெட்டிய மனைவி.

By Ezhilarasan BabuFirst Published Sep 23, 2021, 4:36 PM IST
Highlights

மனைவிக்கு தொடர்ந்து செ*** டார்ச்சர் கொடுத்து வந்த  கணவனின் அந்தரங்க உறுப்பை மனைவி அறுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ரத்தபோக்குடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவன் உயிரிழந்ததால் மனைவிமீது கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

மனைவிக்கு தொடர்ந்து செ*** டார்ச்சர் கொடுத்து வந்த  கணவனின் அந்தரங்க உறுப்பை மனைவி அறுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ரத்தபோக்குடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவன் உயிரிழந்ததால் மனைவிமீது கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. கணவன் மனைவி உறவு என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல, அது இருவரின் உள்ளம் சார்ந்த ஒன்று. அப்படி இருந்தால் மட்டுமே  இல்லற வாழ்க்கையில் தம்பதியர் வெற்றி நடை போட முடியும் என்பது உலகறிந்த ரகசியம், ஆனால் எந்த வரையறையும் இன்றி திருமணம் என்ற போர்வையில் தனது அதீத காம இச்சையைத் தணித்துக் கொள்ளும் பொருளாக கணவன்கள்மனைவியை அணுகும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவன் வலுக்கட்டாயமாக உடலுறவு கொண்டால் அதுவும் வன்புணர்வு தான் என நீதிமன்றம் வெளிப்படையாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இப்படி செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்றும், நீதிமன்றம் தெள்ளத் தெளிவாக கூறி உள்ளது. ஆனால் இவை அனைத்தையும் மீறும் வகையில் சில கணவன்கள் பெண்களை தங்களது காம இச்சைக்கு ஆளாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் மனைவிக்கு தொடர்ந்து ச*** டார்ச்சர் கொடுத்து வந்த கணவனை மனைவி கடுமையாக தண்டித்து உள்ள சம்பவம் ஒன்றும் அரங்கேறியுள்ளது. தெலங்கானா மாநிலம் மெகபூபாபாத் மாவட்டம் மாரிப்பாடா மண்டலத்தின் தனஞ்செர்லா பகுதியை சேர்ந்தவர் பிச்சநாயக் (45) 15 ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு அதேபகுதியை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்தது.

இவர் சமீபகாலமாக தனது மனைவிக்கு  எல்லை மீறிய செ*** டார்ச்சர் கொடுத்து வந்ததாக தெரிகிறது, பலமுறை அவரது மனைவி அவரை எச்சரித்துள்ளார். ஆனால்   பிச்சநாயக் அதை பொருட்படுத்தவேயில்லை, நாளுக்கு நாள் அவரின் தொல்லை அதிகரித்தது. இதனால் ஒருகட்டத்தில் கோபத்தில் எல்லைக்கே சென்ற அவரது மனைவி கணவன் தன்னை வன்புணர்வு செய்ய முயற்சித்தபோது தயாராக வைத்திருந்த அரிவாளால் அவரது ஆணுறுப்பை வெட்டினார். உடனே அதேயிடத்தில் சரிந்து விழுந்த பிச்சநாயக் அலறி ரத்த வெள்ளத்தில் மயங்கினார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். இதனையடுத்து அவரை ஆம்புலன்ஸ் உதவியுடன் அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். பின்னர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், கணவன் மருத்துவமனையில் உயிரிழந்ததால், மனைவி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பிச்ச நாயக்கின் உடலை பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கணவன் மனைவிக்கு தொடர்ந்து செ*** டார்ச்சர் கொடுத்து வந்தநிலையில் மனைவி கணவன் ஆணுறுப்பை வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் தெலங்கானாவில் காட்டுத்தியாக பரவி வருகிறது. 
 

click me!