இறுதிச்சடங்கில் சபதம்... அன்பு ரஜினியை கொடூரமாக கொலை செய்த ரவுடி பரபரப்பு வாக்குமூலம்..!

By vinoth kumarFirst Published Nov 28, 2019, 1:43 PM IST
Highlights

நண்பர் வினோத் கொலைக்கு பழிக்கு பழியாக, அன்பு ரஜினியை கொலை செய்ததாக கைதான ரவுடி சோழன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நண்பர் வினோத் கொலைக்கு பழிக்கு பழியாக, அன்பு ரஜினியை கொலை செய்ததாக கைதான ரவுடி சோழன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

முத்தியால்பேட்டை காட்டாமணிக்குப்பத்தை சேர்ந்தவர் அன்புரஜினி (35). பிரபல ரவுடியான இவர் கடந்த 10-ம் தேதி வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொலை செய்யபடப்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரிடம் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க;- 

அதில், லாஸ்பேட்டையைச் சேர்ந்த ரவுடி சோழன் மற்றும் அவரது கூட்டாளிகள் துாண்டுதலில் அன்பு ரஜினி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, காலாப்பட்டு காங்கிரஸ் பிரமுகர் சந்திரசேகர் கொலை வழக்கில் சிறையில் இருந்த சோழனை நீதிமன்ற அனுமதியுடன் கைது செய்தனர். 

பின்னர் ரவுடி சோழனிடம் போலீசார் விசாரணை நடத்தினார். அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் "கூனிமேடு பகுதியை சேர்ந்த வினோத் எனது நெருங்கிய நண்பர். நான் சொல்லும் பணிகளை எல்லாம் உடனடியாக நிறைவேற்றி தருவார். அவர் கடந்த ஜூலை மாதம் கொலை செய்யப்பட்டார். அவரது இழப்பை என்னால் தாங்க முடியவில்லை. அவரது இறுதிச்சடங்கில் நானும் எனது நண்பர்களும் கலந்து கொண்டோம். அப்போது வினோத்தை கொலை செய்தவர்களை பழிவாங்குவோம் என்று சபதம் ஏற்றுக்கொண்டோம்.

கொலை நடந்த போது அவரை கொலை செய்தது யார் என்று எங்களுக்கு தெரியவில்லை. அவரது கொலை தொடர்பாக போலீசார் சிலரை கைது செய்தனர். அவர்களை ஜாமீனில் எடுக்க அன்பு ரஜினி உதவி செய்தது தெரியவந்தது. அதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டோம். அவரை கொலை செய்ய பல ரவுடிகளிடம் நேரில் பேசினேன். ஆனால் அவர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை.

இதையும் படிங்க;- ஒரே நேரத்தில் 2 பேருடன் கள்ளத்தொடர்பு வைத்து ஆசிரியை உல்லாசம்... அடுத்தவன் பொண்டாட்டிக்காக வெட்டுக்குத்து..!

இதற்கிடையே சந்திரசேகர் கொலையில் கைது செய்யப்பட்டு நான் சிறைக்கு சென்றுவிட்டேன். அதன் பிறகு எனது தம்பி பாண்டியன் மூலம் ஸ்ரீராம் உள்பட பலரை தேர்வு செய்தேன். அவர்களிடம் அன்பு ரஜினியை கொலை செய்யும்படி ஜெயிலில் இருந்தபடியே உத்தரவிட்டேன். அவர்கள் 2 மாதங்களாக அன்பு ரஜினியை பின்தொடர்ந்து சென்று சரியான சந்தர்ப்பம் பார்த்து, அன்பு ரஜினியை கொலை செய்தனர் என தெரிவித்துள்ளார். 

click me!