தூத்துக்குடியில் துடிதுடிக்க வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட பால் வியாபாரி..!

Published : Nov 29, 2019, 01:41 PM ISTUpdated : Nov 29, 2019, 02:29 PM IST
தூத்துக்குடியில் துடிதுடிக்க வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட பால் வியாபாரி..!

சுருக்கம்

அதிகாலை பால் பண்ணைக்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் அந்தோணிமுத்துவை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனையடுத்து, உயிர் பயத்தில் அவர்களிடம் தப்பிக்க ஓடியுள்ளார். ஆனால், அந்த கும்பல் விடாமல் ஓட ஓட விரட்டி படுகொலை செய்தது. இதனால் அந்தோணிமுத்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், அந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அதிகாலை நேரம் என்பதால் மிக எளிதாக மர்ம கும்பல் கொலை செய்தனர்.

தூத்துக்குடியில் பால் வியாபாரி நள்ளிரவில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி டி.சவேரியார் புரத்தை சேர்ந்தவர் அந்தோணிமுத்து (65). இவர் அங்குள்ள ஜெ.ஜெ.நகர் பகுதியில் மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். தினமும் இரவில் வீட்டில் சாப்பிட்டு விட்டு மாடுகள் கட்டியுள்ள தொழுவத்திற்கு சென்று உறங்கிவிடுவார். வழக்கம்போல நேற்று இரவும் அதே போல் அங்கு சென்று படுத்து தூங்கினார். 

இந்நிலையில் இன்று அதிகாலை பால் பண்ணைக்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் அந்தோணிமுத்துவை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனையடுத்து, உயிர் பயத்தில் அவர்களிடம் தப்பிக்க ஓடியுள்ளார். ஆனால், அந்த கும்பல் விடாமல் ஓட ஓட விரட்டி படுகொலை செய்தது. இதனால் அந்தோணிமுத்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், அந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அதிகாலை நேரம் என்பதால் மிக எளிதாக மர்ம கும்பல் கொலை செய்தனர். 

இதுதொடர்பாக உடனே அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்தோணி முத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சொத்து பிரச்சனை காரணமாக அவர் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!