வீட்டு வேலைக்காரியை நிர்வாணப்படுத்தி கட்டி வைத்து ஹவுஸ் ஓனர் செய்த அசிங்கம்... இளம்பெண் எடுத்த பயங்கர முடிவு

By Ezhilarasan BabuFirst Published Aug 17, 2022, 8:05 PM IST
Highlights

வீட்டில் வேலைக்கார பெண்ணை சந்தேகத்தின் பெயரில் நிர்வாணப்படுத்தி வீட்டின் உரிமையாளர்கள் கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் நகை திருடியதாக மந்திரவாதி கூறியதைக் கேட்டு வீட்டின் உரிமையாளர் இக்கொடுமையில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வீட்டில் வேலைக்கார பெண்ணை சந்தேகத்தின் பெயரில் நிர்வாணப்படுத்தி வீட்டின் உரிமையாளர்கள் கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் நகை திருடியதாக மந்திரவாதி கூறியதைக் கேட்டு வீட்டின் உரிமையாளர் இக்கொடுமையில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒருபுறம் கல்வி, அறிவியல் வளர்ந்து வரும் நிலையில் மறுபுறம் மூட நம்பிக்கை பழமைவாதங்கள் தலை தூக்கி வருகிறது. இந்த மூட பழக்க வழக்கங்கள் சமூகத்தின் பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்து வருகின்றன, மூட பழக்க வழக்கங்களில் அடிப்படையில் சமூகத்தில் பெண்களை இழிவுபடுத்துவது, அவர்களை அவமானப்படுத்துவது போன்ற சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் வீட்டில் திருடப்பட்டதாக வீட்டு வேலைக்காரியை மந்திரவாதி அடையாளம் காட்டியதால் வீட்டின் உரிமையாளர் அந்த பெண்ணை நிர்வாணப்படுத்தி கொடுமை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

இதையும் படியுங்கள்: ஹோட்டல் ரூமே கதி.. காதலர்களுடன் கும்மாளம் - 550 சவரன் நகையை மாடல் அழகியிடம் பறிகொடுத்த தொழிலதிபர்

முழு விவரம் பின்வருமாறு தெற்கு டெல்லியில் உள்ள சத்பரி அன்சல் வில்லாவில் 43 வயதான பெண் ஒருவர் வீட்டு வேலை செய்து வந்தார். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு அந்த வீட்டில் நகைகள் காணாமல் போனது, இடையில் பல இடங்களில் தேடியும் நகை கிடைக்காததால் அந்த வீட்டின் உரிமையாளர் வீட்டிற்கு மந்திரவாதியை அழைத்து வந்தார். அப்போது அந்த மந்திரவாதி வீட்டு உரிமையாளரிடம் வீட்டில் வேலை செய்யும் அனைவருக்கும் உணவில் சுண்ணாம்பு கலந்து தரும்படி கூறினார், அந்த உணவை சாப்பிடும் போது யாருடைய வாய் சிவக்கிறதோ அவர்கள்தான் நகையை திருடியவர்கள் எனக் கூறினார்.

இதையும் படியுங்கள்:  என்னை விட்டுட்டு இன்னொருத்தன் கேட்குதா... காதலியின் தொண்டையை டார் டாரா அறுத்த சைகோ காதலன்.

இதைக் கேட்ட அந்த வீட்டின் உரிமையாளரும் அப்படியே செய்தார், அப்போது ஒரு பெண்ணின் வாய் சிவந்தது பின்னர் அந்தப் பெண்ணைப் பிடித்து தனியறையில் கட்டிவைத்து நிர்வாணப்படுத்தி அடித்து கொடுமைப்படுத்தினர், ஒரு கட்டத்தில் அந்த பெண் கொடுமை தாங்க முடியாமல் கழிவறைக்கு செல்வதாக கூறி அங்கு சென்றதுடன், அங்கிருந்த எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

பின்னர்  அந்தப் பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், இதுதொடர்பாக ஆகஸ்ட் 10-ம் தேதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்தது, இந்த விவகாரத்தில் அந்த வீட்டின் உரிமையாளர் சீமா கதுன், பப்லு கான்  உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர். 
 

click me!