அந்த வெள்ளை டி- சர்ட் இவன்தாண்டா.. கஞ்சா போதையில் ஆளை மாற்றி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்

By Raghupati RFirst Published Sep 6, 2022, 5:58 PM IST
Highlights

முன்விரோதம் காரணமாக கொலை செய்ய சென்ற கும்பல் ஒன்று, கஞ்சா போதையில் ஆள் மாறி இளைஞரை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த ராபின் என்ற இளைஞரை நள்ளிரவில் கஞ்சா போதையில் ஆள் தெரியாமல் 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது. முன் விரோதம் காரணமாக மோகன்ராஜ் என்ற கஞ்சா விற்பனை செய்யும் நபரை வெட்டுவதற்கு பதிலாக ஆள் மாறி ராபின் என்ற அப்பாவி இளைஞரை கொடூரமாக வெட்டி சாய்த்துள்ளனர்.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும்,  ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில் 5 தனிப்படை அமைத்து கொலை செய்தவர்களை தேடி வந்தனர்.  இந்த நிலையில் சோழவரத்தைச் சேர்ந்த கார்த்திக் (25), காரனோட பகுதியை சேர்ந்த மதுரை சரவணன் (25), பாடியநல்லூர் ஜோதி நகர் பகுதியை சேர்ந்த ராகுல் (26) ஆகிய மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். 

மேலும் செய்திகளுக்கு..கோவிலில் மருமகன் சபரீசனுடன் துர்கா ஸ்டாலின்.. பகுத்தறிவு இயக்கத்துக்கு சோதனையா? வச்சு செய்யும் நெட்டிசன்கள்

இதில் சம்பந்தப்பட்ட ஒரு முக்கிய குற்றவாளியை போலீசார் தனிப்படை அமைத்து வலை வீசி தேடி வருகின்றனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி உள்ளது. சோழவரம் பகுதியில் இரண்டு கேங்க் லீடர்களாக செயல்பட்டு வரும் சேதுபதி, முத்து சரவணன் தரப்பினர் கஞ்சா விற்பது, மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று அடிதடி, வழிப்பறி, கொலை, கொள்ளைகளில் ஈடுபடுவது என தங்களது திட்டங்களை நிறைவேற்றி வந்து கொண்டிருந்ததாகவும், இதில் யார் பெரிய ஆள் என்ற போட்டி வேறு இருந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

கடந்த 14 நாட்களுக்கு முன் சேதுபதி தரப்பை சேர்ந்த கல்லூரி மாணவர் கானா பாடகரான ஸ்டார் அபி (23) என்பவர் தன்னுடைய வேலைகள் அனைத்தையும் youtube இல் லைவாக பதிவேற்றி அதை ரிவ்யூவும் செய்து வந்த நிலையில் உறவினர்களுடன் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்றார். அப்போது அவர் மரக்காணம் அருகே உள்ள கைப்பாணி என்ற இடத்தில் நடைபயணம் சென்று கொண்டிருந்தபோதே இரு சக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பலால் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

அபிஷேக் கொலை சம்பவத்திற்கு பழி தீர்க்கும் விதமாக முத்து சரவணன் தரப்பில் உள்ள சோழவரம் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜை கொலை செய்வதற்காக ஸ்கெட்ச் போடப்பட்டுள்ளது. வெள்ளை டி-ஷர்ட் அணிந்திருப்பவர் தான், மோகன் ராஜ் என நினைத்து வெட்ட திட்டம் தீட்டியுள்ளனர். ஆனால், வெள்ளை டி ஷர்ட்டில் ராபின் என்ற இளைஞர் இருந்ததால், ஆள் மாறி, அப்பாவி இளைஞரான ராபினை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகளுக்கு..ராகுல் காந்தி நடைபயணம்; 2024ல் தரமான சம்பவத்துக்கு தயாரான 3 முதல்வர்கள்.. ஸ்டாலினும் இருக்காரு! திகிலில் பாஜக

click me!