எந்த நேரமும் செல்போனில் கடலை போட்ட 2 மனைவி.. ஆத்திரத்தில் கழுத்தை கரகரவென அறுத்துக் கொன்ற கணவன்..!

By vinoth kumarFirst Published Mar 19, 2021, 6:18 PM IST
Highlights

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் 2வது மனைவியை கொடூரமாக குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் 2வது மனைவியை கொடூரமாக குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள வீலிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் மனோகரன் (32) விவசாயி. இவரது மனைவி நாகேஸ்வரி (30). இவர்களுக்கு சங்கீதா (9) என்ற மகளும், நிஷாந்த் (7) என்ற மகனும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், மனோகரனுக்கும் அதே ஊரைச் சேர்ந்த ராமேஸ்வரி (28) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 6 மாதத்துக்கு முன்பு அவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

வீலிநாயக்கன்பட்டியில் உள்ள ராமேஸ்வரியின் பெற்றோருக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தனர். அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த மனோகரன் தனது மனைவியை கத்தியால் குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். உடனே கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராமேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர், மனோகரனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில்:-ராமேஸ்வரிக்கு சொந்தமான இடத்தில் நான் வீடு கட்டியுள்ளேன். இதனால் அந்த இடத்தை எனது பெயருக்கு எழுதி தருமாறு கேட்டேன். இதற்கு அவர்கள் குடும்பத்தினர் சம்மதிக்க வில்லை. மேலும் ராமேஸ்வரி அடிக்கடி தனியாக செல்போனில் நீண்ட நேரம் பேசி வந்தார். இதனை நான் தட்டிக் கேட்டபோது, எங்களுக்குள் தகராறு அதிகரித்தது. ஒரு கட்டத்தில் என்னை வீட்டை விட்டு வெளியேறுமாறு மிரட்டினார். இதனால் ஆத்திரமடைந்து அவரை குத்திக் கொன்றேன் என்றார். முதல் மனைவி கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில் 2வது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!