லலிதா ஜூவல்லர்ஸ் கொள்ளையில் திடீர் திருப்பம்... தமிழக காவல்துறைக்கு தண்ணி காட்டிய கர்நாடக போலீஸ்..!

Published : Oct 12, 2019, 04:17 PM IST
லலிதா ஜூவல்லர்ஸ் கொள்ளையில் திடீர் திருப்பம்... தமிழக காவல்துறைக்கு தண்ணி காட்டிய கர்நாடக போலீஸ்..!

சுருக்கம்

லலிதா ஜூவல்லர்ஸ் கொள்ளையில் திடீர் திருப்பமாக தமிழகத்திற்குள் நுழைந்த  கர்நாடக போலீஸ் தமிழக காவல்துறைக்கு தண்ணி காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

லலிதா ஜுவல்லரியில் கடந்த 2- ம்தேதி ரூ.13 கோடி அளவிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. சல்லடை போட்டு கொள்ளையர்களை தேடியதில் முருகன், மணிகண்டன், சுரேஷ் உள்ளிட்டோர் இந்தச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதில் மணிகண்டன் காவல்துறையினர் நடத்திய சோதனையில் மணிகண்டன் மாட்டிக்கொண்டான். சுரேஷ் நேற்று முன் தினம் நீதிமன்றத்தில் சரண்டரான நிலையில் நேற்று இந்தக் கொள்ளையில் மூளையாக செயல்பட்ட முருகன் பெங்களூரு நீதிமன்றத்தில் சரண்டர் ஆனான்.


பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் கொடுத்த தகவலின் அடிப்படையில் கர்நாடக போலீஸார் தமிழகம் வந்து சுமார் 11 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கைப்பற்றினர். கர்நாடக காவல்துறையினர் நகைகளை மீட்டுச் சென்றபோது தமிழகத்தை சேர்ந்த பெரம்பலூர் காவல்துறையினர் காரில் துரத்திச் சென்று அந்த நகைகளை மீட்டனர்.

 

இந்த விசாரணையில், நகைகளை கொடுத்து விட்டு 7 லட்சம் ரூபாயை முன்பணமாக கொள்ளைக்கும்பல் பெற்றுக்கொண்டது தெரிய வந்தது. இந்நிலையில் நாலை மறுநாள் கொள்ளையன் சுரேஷை காவலில் எடுத்து அவனிடம் விசாரணை நடத்த தமிழக காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

PREV
click me!

Recommended Stories

Salem Crime: இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 23 வயது லலிதா.. அலறிய சேலம்.. நடந்தது என்ன?
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்