பிறப்புறுப்பை அறுத்து ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கொலை… கள்ளக் காதலியைத் தேடும் போலீஸ் !!

By Selvanayagam PFirst Published Feb 6, 2019, 10:23 AM IST
Highlights

மதுரை அழகர்கோவில் லாட்ஜில் ஓய்வு பெற்ற சப்.இன்ஸ்பெக்டர் ஒருவர் பிறப்புறுப்பை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அங்கிருந்து தப்பிச் சென்ற அவரின் கள்ளக் காதலியை போலீஸ் தேடி வருகின்றனர்.
 

விருதுநகர்  இந்திராநகரை சேர்ந்தவர் தங்கராஜ் இவர் கடந்த 3-ந் தேதி மதுரை அழகர்கோவிலுக்கு வந்துள்ளார். அவருடன் 45 வயது மதிக்கத்தக்க பெண், 12 வயது சிறுமி, 11 வயது சிறுவன் ஆகியோர்  வந்துள்ளனர். அழகர்கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அங்குள்ள விடுதி ஒன்றில் தங்கி உள்ளனர். அங்கிருந்த ஊழியர்களிடம் தான் ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என தங்கராஜ் கூறியுள்ளார்.

இந்தநிலையில் அவர்கள் தங்கிய அறை நீண்டநேரமாக திறக்கப்படவில்லை. இதனால் விடுதி ஊழியர்கள் அறையை திறந்து பார்த்தபோது, மர்ம உறுப்பு அறுபட்ட நிலையில் தங்கராஜ் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவருடன் வந்த பெண் உள்பட 3 பேரும் அங்கு இல்லை. இதுகுறித்து அப்பன்திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட தங்கராஜின் உடல் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் வழங்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். தங்கராஜூவுக்கு 6 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது.

கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்ததால் அவரது கையில் எப்போதும் ஆயிரக்கணக்கில் பணம் வைத்திருப்பாராம். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும், தங்கராஜூக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் அந்த பெண்ணும், அவருடைய மகன், மகளும் மதுரைக்கு வந்துள்ளனர்.

சம்பவத்தன்று அந்த பெண்தான், தங்கராஜை கொலை செய்து விட்டு, அவர் அணிந்திருந்த நகை மற்றும் பணத்துடன் தப்பி சென்றிருக்கலாம். எனவே கொலைக்கான காரணத்தை அறிய அந்த பெண்ணையும், அவருடைய பிள்ளைகளையும் பிடித்த பின்பு தான் தெரியவரும். மேலும் அவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த பெண்ணை சென்னைக்கு சென்று தேடிவருகின்றனர்.

இதற்கிடையில் அந்த பெண்ணுக்கும், வேறொரு வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது என்றும் சம்பவத்தன்று அந்த வாலிபரும் மதுரைக்கு வந்துள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

எனவே அவரும் சேர்ந்துதான் தங்கராஜை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

click me!