பிரியாணியில் மயக்க மருந்து... வேறொருவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை ஸ்டூடியோவில் வைத்து திகட்டத் திகட்ட அனுபவித்த ஓனர்..!

By vinoth kumarFirst Published Dec 5, 2019, 11:46 AM IST
Highlights

உணவில் மயக்க மருந்து கொடுத்து ஸ்டூடியோ உரிமையாளர் பாலியல் பலாத்காரம் செய்ததால் பெண் ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணமான ஸ்டூடியோ உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

உணவில் மயக்க மருந்து கொடுத்து ஸ்டூடியோ உரிமையாளர் பாலியல் பலாத்காரம் செய்ததால் பெண் ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணமான ஸ்டூடியோ உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி அரியாங்குப்பம் சுப்பையா நகரில் வசிப்பவர் மண்ணாங்கட்டி. ஓய்வுபெற்ற ஏஎப்டி மில் ஊழியர். இவருக்கு 4 மகள்கள், 3 மகன்கள். கடைசி மகள் தனலட்சுமி (31). பிளஸ்-2 முடித்திருந்த இவர், மகாத்மா காந்தி வீதி சின்னகடையில் மதுர (40) என்பவருக்கு சொந்தமான ஸ்டூடியோவில் 3 ஆண்டாக வேலை செய்து வந்துள்ளார். 

கடந்த ஜனவரி முதல் மதுர தனது ஸ்டூடியோவில் தனலட்சுமிக்கு பிரியாணி, டீ, காபி ஆகியவற்றில் அடிக்கடி மயக்க மருந்தை கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இவ்விவகாரம் நாளடைவில் தனலட்சுமிக்கு தெரியவரவே தனது தந்தையிடம் இதுதொடர்பாக கூறியுள்ளார். 

 

இதையடுத்து மதுரயை திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்த நிலையில், அவருக்கு ஏற்கனவே திருமணமான தகவல் தெரியவரவே தனலட்சுமி அதிர்ச்சியில் உறைந்தார். சமீபகாலமாக மனஉளைச்சலில் இருந்த தனலட்சுமி நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, நேற்று அதிகாலை 4:00 மணியளவில், அந்த பெண் உயிரிழந்தார். 

சிகிச்சையின் போது, நீதிபதி சிவக்குமாரிடம் அப்பெண் அளித்த வாக்குமூலத்தில் போட்டோ ஸ்டூடியோவில் வேலை செய்தபோது, உரிமையாளர் மதுரை, குளிர்பானம் மற்றும் பிரியாணியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பல முறை என்னை பலாத்காரம் செய்தார். மதுரைக்கு திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளதால், அவரது குடும்பம் பாதிக்கப்படும் என்பதால், போலீசில் புகார் அளிக்கவில்லை. பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான நான் இன்னொருவரை திருமணம் செய்து அவருக்கு துரோகம் செய்ய விரும்பவில்லை. அதனால் தான் உயிரை மாய்த்துக் கொள்ள தீக்குளித்தேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள மதுராவை தேடி வருகின்றனர்.

click me!