Murder: பட்டப்பகலில் பயங்கரம்... திமுக பிரமுகரின் மகன் அலுவலகத்தில் வைத்து வெட்டிப் படுகொலை..!

Published : Oct 26, 2023, 01:40 PM IST
Murder: பட்டப்பகலில் பயங்கரம்... திமுக பிரமுகரின் மகன் அலுவலகத்தில் வைத்து வெட்டிப் படுகொலை..!

சுருக்கம்

சென்னையில் திமுக பிரமுகர் மகன் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

சென்னை திருவொற்றியூரில் அடுத்த விம்கோநகர் பகுதியை சேர்ந்தவர் திமுக பிரமுகர் விவேகானந்தன். இவரது மகன் காமராஜ். இருவரும் திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், வழக்கம் போல காமராஜ் இன்று காலை அவரது அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

அப்போது, அவரது அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல்  பயங்கர ஆயுதங்களுடன் அலுவலகத்தின் உள்ளேயே புகுந்து காமராஜை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். உடனே ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி காமராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காமராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக பிரமுகர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்