"அவள் உனக்கு தங்கச்சி முறைடா, விட்றுடா "... மதிக்காத காதலன்.. மண்வெட்டியால் போட்டு தள்ளிய அத்தை மகன்.

By Ezhilarasan BabuFirst Published Apr 22, 2022, 7:37 PM IST
Highlights

தங்கை முறை கொண்ட பள்ளி மாணவியை காதலித்த இளைஞனை அந்தப்பெண்ணின் அத்தை மகன் கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தஞ்சாவூர் அருகே வாளமர்கோட்டை பகுதியில் நடந்துள்ளது. 
 

தங்கை முறை கொண்ட பள்ளி மாணவியை காதலித்த இளைஞனை அந்தப்பெண்ணின் அத்தை மகன் கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தஞ்சாவூர் அருகே வாளமர்கோட்டை பகுதியில் நடந்துள்ளது. 

காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வார்கள், அதாவது அது சாதி, மதம், இனம், பேதம் பார்க்காது என்பதன் அர்த்தம் தான் அது. ஆனால் இங்கு ஒரு இளைஞர் தங்கை முறை கொண்ட பள்ளி மாணவியை காதலித்து தன் உயிரையே பறிகொடுத்துள்ள துயர சம்பவம் நடந்துள்ளது. தஞ்சாவூர் அருகே வாளமர் கோட்டை பகுதி வாண்டையார் தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகன் ஆனந்தன்( 21) தனியார் நிறுவனத்தில் ஐடிஐ படித்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை  காதலித்து வந்துள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தப் பெண் இந்த இளைஞனுக்கு தங்கை முறை ஆகிறது. ஆனாலும் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். 

இந்த சம்பஙம் இவர்கள் இரு வீட்டாருக்கும் தெரிந்த நிலையில் அவர்கள் இருவரையும் கண்டித்தனர். ஆனால் ஆனந்த் தனது காதலை கைவிட மறுத்தார் இந்நிலையில் மாணவியின் அத்தை மகன் சூரக்கோட்டை சேர்ந்த உதயகுமார் (25) காதலன் ஆனந்தனை அழைத்து, படிக்கிற வயதில் படிப்பை மட்டும் பார்க்கணும், எதையும் முறையாக செய்ய வேண்டும்,  முறை தவறி காதலிப்பது கூடாது என அட்வைஸ் செய்ததாக தெரிகிறது. ஆனால் ஆனந்தன் அதை கொண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு வளமார் கோட்டை கல்லணை கால்வாய் பகுதியில்  ஆனந்தன் நின்றிருந்த நிலையில் மீண்டும் அங்கு வந்த உதயகுமார் நீ அவளைக் காதலிக்க கூடாது. அவளை விட்டு விலகி விடு. இல்லையென்றால் உன் கதி வேறு என எச்சரித்துள்ளார்.

அப்போது இருவருக்கும்  வாக்குவாதம் ஏற்பட்டது, பின்னர் அது கைகலப்பாக மாறியது,  அதில் ஆத்திரமடைந்த  மாணவியின் அத்தை மகன் உதயகுமார் அருகிலிருந்த மண்வெட்டி எடுத்து ஆனந்தின் தலையில் தாக்கியுள்ளார்.  ஆனந்தன் தலையிலிருந்து ரத்தம் கொட்டியது, ஆனாலும் தாக்குவதை நிறுத்தவில்லை. கண்மூடித்தனமாக தாக்கியதில் ஆனந்தனின் முகம் சிதைந்தது. அதில் ஆனந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள உதயகுமாரை தேடி வருகின்றனர். இந்த கொடூர கொலை அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

click me!