ஒன்றரை வயது குழந்தைக்கு பாலியல் கொடுமை...! காம கொடூரனின் கேடு கேட்ட செயல்..!

By ezhil mozhiFirst Published May 9, 2019, 5:18 PM IST
Highlights

ஒன்றரை வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்துள்ளார் குழந்தையின் மாமா முறையினர். 

ஒன்றரை வயது குழந்தைக்கு பாலியல் கொடுமை...! 

ஒன்றரை வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்துள்ளார் குழந்தையின் மாமா முறையினர். 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு பெண்மணியின் குழந்தைக்கு தான் இந்த கொடுமை நடந்துள்ளது. இவர் தன் குழந்தையுடன் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கு திருமணத்திற்கு வந்த மாமன் முறையிலான ஒரு நபர் குழந்தையை தூக்கி வைத்து கொஞ்சி பேசி உள்ளார் 

பின்னர் சிறிது நேரத்தில்,குழந்தையுடன் விளையாடிய அவர் திடீரென அங்கிருந்து வேறு ஒரு இடத்திற்கு சென்றுள்ளார். குழந்தையையும் காணாவில்லை.

பின்னர் அதிர்ச்சி அடைந்த தாய், குழந்தையை அங்கும் இங்குமாக தேடி வர.. திருமணம் மண்டபத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் உள்ள இருந்த புதரில் குழந்தை ரத்தத்துடன் சுயநினைவின்றி இருந்துள்ளது. பின்னர் குழந்தையின் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் இந்த தகவல் குறித்து போலீசாருக்கு  தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

click me!