சிறுமியை கடத்தி கற்பழித்த ஆட்டோ டிரைவர்!! கோவையில் நடந்த கொடூரம்....

By sathish kFirst Published May 22, 2019, 1:15 PM IST
Highlights

இந்தியாவில் நாளுக்கு நாள், பாலியல் வன்கொடுமைகளும், சீரழித்து கொலை செய்யும் சம்பவமும் அரங்கேறி வருகிறது. அதில் சிறுமிகளை சீரழித்து கொள்வது அரங்கேறி வருகிறது.

இந்தியாவில் நாளுக்கு நாள், பாலியல் வன்கொடுமைகளும், சீரழித்து கொலை செய்யும் சம்பவமும் அரங்கேறி வருகிறது. அதில் சிறுமிகளை சீரழித்து கொள்வது அரங்கேறி வருகிறது.

கோவையில் 14 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். கோவை காந்திபுரம் ராம்நகர் பகுதியை சேர்ந்த ராதா என்ற சிறுமி கோவையில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். 

அந்த பகுதியில் உள்ள மதியழகனின் ஆட்டோவில் சிறுமி பள்ளிக்கு சென்றுவருவது வழக்கம். சிறுமியின் பெற்றோர் வீட்டை மாற்றி கோவை குனியமுத்தூர் குளத்துபாளையம் பகுதியில் வசித்து வருகிறார்கள். 

இந்நிலையில்,கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மதியழகன் தொடர்ந்து சிறுமியை பார்பதற்காக குளத்துபாளையம் வந்து சென்றுள்ளார். வீட்டிலிருந்த அந்த சிறுமியை கடத்தி சென்றுள்ளார். இந்த தகவலை அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர்கள் குனியமுத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போக்ஸோ சட்டத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!