காதலன் ஃபர்ஸ்டு நண்பர்கள் நெக்ஸ்ட்.. போதை பொருள் கொடுத்து பள்ளி மாணவியை நாசம் செய்த கும்பல்.. சென்னையில் பகீர்

By vinoth kumarFirst Published Mar 1, 2022, 8:27 AM IST
Highlights

பிறகு தான் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கு பள்ளி மாணவியை அழைத்து சென்று போதை பொருள் அடங்கிய ஒரு குளிர் பானம் குடிக்க வைத்து பலாத்காரம் செய்துள்ளார். பல் மருத்துவ கல்லூரி மாணவன் வசந்த் கிரிஷுக்கு கஞ்சா மற்றும் ஹூக்கா மூலம் போதை மருந்து உட்கொள்ளும் பழக்கம் உள்ளது.

8ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு போதை பொருள் கொடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பாக 4 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி. இவர், ராமாபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவிக்கும் பள்ளி அருகே இருந்த மருத்துவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இதனால் பள்ளி மாணவியை வசந்த் கிரிஷ் பல இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார்.

இதையும் படிங்க;- அண்ணன் வெளிநாட்டுக்கு சென்ற கேப்பில் அண்ணியை கரெக்ட் செய்த கொழுந்தன்.. ஏற்காட்டு ரூமில் நடந்த ஏடாகுடம்.!

பிறகு தான் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கு பள்ளி மாணவியை அழைத்து சென்று போதை பொருள் அடங்கிய ஒரு குளிர் பானம் குடிக்க வைத்து பலாத்காரம் செய்துள்ளார். பல் மருத்துவ கல்லூரி மாணவன் வசந்த் கிரிஷுக்கு கஞ்சா மற்றும் ஹூக்கா மூலம் போதை மருந்து உட்கொள்ளும் பழக்கம் உள்ளது. பள்ளி மாணவி காலையில் வீட்டில் இருந்து பள்ளிக்கு வரும் போது, வசந்த் கிரிஷ் தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு பள்ளி மாணவியை அழைத்து வந்து, போதை பொருள் கொடுத்து நாள் முழுவதும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதையும் படிங்க;- எங்க அண்ணி டிரஸ்ஸே இல்லாம எவ்வளவு அழகாக இருக்கா பாரு... செல்போனில் ஆபாச படம் காட்டிய கணவர்... மனைவி எடுத்த விபரீத முடிவு..!

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட பல் மருத்துவ கல்லூரி மாணவன் வசந்த் கிரிஷ், தனது நெருங்கிய நண்பர்களும், தன்னுடன் போதை பொருள் உட்கொள்ளும் சினிமா துணை நடிகர் சதீஷ் குமார்(22), கல்லூரி மாணவன் விஷால்(19), தனியார் பல் மருத்துவ கல்லூரி பேராசிரியர் பிரசன்னா(32) ஆகியோரை தினமும் வரவழைத்து, பள்ளி மாணவிக்கு போதை பொருள் கொடுத்து தொடர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில், பள்ளிக்கு சென்ற மாணவி வீட்டிற்கு சோர்வடைந்து வந்துள்ளார். இதுதொடர்பாக பெற்றோர் விசாரித்த போது நடந்தவற்றை கூறி  மாணவியிடம் கதறி அழுதுள்ளார். 

இதையும் படிங்க;- பெண்கள் முன்னால் பேண்ட் ஜிப்பை அவிழ்த்து அந்தரங்க உறுப்பை காட்டிய கோயில் பூசாரி... அலேக்கா தூக்கிய போலீஸ்..!

இதனால், அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், சம்பவம் குறித்து வடபழனி உதவி ஆணையர் பாலமுருகனிடம் புகார் அளித்தனர். புகாரின் மீது விசாரணை நடத்த வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு உதவி கமிஷனர் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதனையடுத்து, கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 பேர் போச்சோவில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். 

click me!