ஜீவஜோதிக்கு ஆசைப்பட்டு ஆயுள் தண்டனை கைதியாய் ஜீவனை இழந்த சரவணபவன் அண்ணாச்சி..!

By Thiraviaraj RMFirst Published Jul 18, 2019, 11:17 AM IST
Highlights

ஜீவஜோதியை திருமணம் செய்ய ஆசைப்பட்டு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான சரவண பவன் ராஜகோபால்  உடலநலம் குன்றியதால் விஜயா மருத்துவமனையில் காலமானார். 

ஜீவஜோதியை திருமணம் செய்ய ஆசைப்பட்டு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான சரவண பவன் ராஜகோபால்  உடலநலம் குன்றியதால் விஜயா மருத்துவமனையில் காலமானார். 

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் சரவண பவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால். உடல் நிலை மோசமாக இருந்ததால் நீதிமன்ற உத்தரவின்படி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த ராஜகோபாலின் உடல்நிலை கவலைக்கிடமானது.

இதனை தொடர்ந்து அவரது மகன் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் ராஜகோபால் சுயநினைவின்றி இருப்பதாகவும், அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து நீதிபதிகள், ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட்டனர். மனுதாரர் தனது சொந்த செலவிலேயே தந்தையை இடமாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்றும், இதனால் ஏற்படும் எந்தவித அசம்பாவித்துக்கும் தமிழக அரசு பொறுப்பு ஏற்காது என்றும் உத்தரவிட்டனர்.

இதனை தொடர்ந்து சரவண பவன் ராஜகோபால் நேற்று முந்தினம் இரவு 9.30 மணி அளவில் ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்துல் இருந்து வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார். அவருக்கு தற்போது 72 வயதாகிறது.

உலகம் முழுவதும் 2300 கிளைகளுடன் சரவண பவன் ஓட்டலை நிறுவி சாம்ராஜ்ஜியம் நடத்திய சரவண பவன் அண்ணாச்சி பெண்கள் மீதான பலவீனத்தால் கடைசிகாலத்தில் ஆயுள் தண்டனை கைதியாக மரணமடைய வேண்டிய நிலையை உருவாக்கிக் கொண்டார்.  

click me!