சினிமா பாணியில் ரவுடி ஓட, ஓட விரட்டி படுகொலை..!

By vinoth kumarFirst Published Apr 24, 2019, 5:39 PM IST
Highlights

திண்டுக்கல்லில் பிரபல ரவுடி ஓட, ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்லில் பிரபல ரவுடி ஓட, ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் ரவுண்டு ரோடு பகுதியைச் சேர்ந்த பாலு மகன் கார்த்திக் (வயது 35). இவருக்கு சந்திரா என்ற மனைவியும், கவுசல்யா (7) என்ற மகளும் உள்ளனர். இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றது. இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டில் சாப்பிட்டு விட்டு காத்து வாங்குவதற்காக அனுமந்தன்நகரில் போடப்பட்டுள்ள புதிய பாலத்தில் நடந்து சென்று கொண்டு இருந்தார். 

அப்போது இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் கார்த்திக்கை விரட்ட ஆரம்பித்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கார்த்திக் உயிருக்கு பயந்து பாலத்தின் மீது ஓடினார். ஆனால் 2 புறமும் சுற்றி வளைத்த அந்த கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கார்த்திக் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஆகையால் முன்விரோதம் காரணமாக அவர் வெட்டி படுகொலை செய்திருக்க வாய்ப்புள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!