அடுத்தவ பொண்டாட்டியை படுக்கைக்கு அழைத்த ரவுடி.. ஆத்திரத்தில் வெட்டிக் கூறுபோட்ட கணவன்..!

Published : Sep 11, 2020, 06:02 PM ISTUpdated : Sep 12, 2020, 11:21 AM IST
அடுத்தவ பொண்டாட்டியை படுக்கைக்கு அழைத்த ரவுடி.. ஆத்திரத்தில் வெட்டிக் கூறுபோட்ட கணவன்..!

சுருக்கம்

விழுப்புரம் அருகே மனைவியை உல்லாசத்துக்கு அழைத்த பிரபல ரவுடியை  கணவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் அருகே மனைவியை உல்லாசத்துக்கு அழைத்த பிரபல ரவுடியை  கணவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் சின்னமுதலியார் சாவடியை சேர்ந்தவர் பிரபல ரவுடியான மணவாளன் (27). திருமணமாகாத இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில்,  மணவாளன் ரத்த வெள்ளத்தில் கொடூர வெட்டு பிணமாக கிடந்தார். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரவுடியின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா அல்லது வேறு காரணமாக என்பது குறித்து  தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, சின்ன முதலியார் சாவடியை சேர்ந்த பிரபல ரவுடி ஆனந்த் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியானது. 

அதில், கைதான ஆனந்த், கொலை செய்யப்பட்ட மணவாளன் ஆகிய 2 பேரும் அந்த பகுதியில் ரவுடிகளாக வலம் வந்துள்ளனர். இவர்கள் கொலை உள்ளிட்ட பல்வேறு கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆனந்த் மனைவியை மணவாளன் உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் இது குறித்து தனது கணவரிடம் கதறியபடி கூறியுள்ளார். ஆத்திரம் அடைந்த ஆனந்த் நேரடியாக மணவாளனிடம் சென்று இது குறித்து எச்சரித்தார். ஆனாலும், ஆனந்த் மனைவியின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

இதனால், மேலும் ஆத்திரமடைந்த ஆனந்தன் மணவாளனை போட்டு தள்ள முடிவு செய்தார். மணவாளனிடம், வா மது அருந்த செல்லலாம் என்று ஆசைவார்த்தை கூறினார். ஆனந்த் கூறியபடி மணவாளன் அப்பகுதிக்கு சென்றார். அங்கு 2 பேரும் அமர்ந்து மது குடித்தனர். பின்னர், ஆனந்தன் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து மணவாளனை அரிவாளால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்தனர். இதனையடுத்து, ஆனந்த் கொடுத்த தகவலின்பேரில் அவரது நண்பர்கள் 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி