9 மாதம் கர்ப்பிணி கொலை வழக்கில் திடீர் திருப்பம்... கள்ளக்காதலுக்காக நாடகமாடிய கணவர்..!

By vinoth kumarFirst Published Oct 24, 2019, 6:20 PM IST
Highlights

திண்டுக்கல் அருகே 9 மாதம் கர்ப்பிணி பெண்ணை கொலை செய்து நாடகமாடிய கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலியையும் போலீசார் தேடி வருகின்றனர். 

திண்டுக்கல் அருகே 9 மாதம் கர்ப்பிணி பெண்ணை கொலை செய்து நாடகமாடிய கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலியையும் போலீசார் தேடி வருகின்றனர். 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வசந்த் நகரைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (26). இவரது மனைவி சுஷ்மிதா (20). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 9 மாத கர்ப்பிணியாக இருந்த சுஷ்மிதா நேற்று கவுண்டச்சிபட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டின் அருகே வயலில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக உடனே கணவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுஷ்மிதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முதலில் நகைக்காக கொலை நடைபெற்றிருக்கலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கள்ளக்காதலிக்காக 9 மாத கர்ப்பிணி பெண்ணை கணவரே கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், வேடசந்தூர் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தினேஷ்குமாருக்கு நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த விபரம் கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் சுஷ்மிதாவுக்கு தெரிய வந்தது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் அவரது செல்போனையும் வாங்கி யார்? யாருக்கு போன் செய்துள்ளார்? என அடிக்கடி சோதித்து வந்துள்ளார். இதனால் தனது கள்ளக்காதலியை பார்ப்பதை தவிர்த்து வந்தார். இருந்தபோதும் அவர் அடிக்கடி தினேஷ்குமாருக்கு போன் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், கள்ளக்காதலி அறிவுரையின் பேரில் தனது மனைவியை கொலை செய்ய தினேஷ்குமார் திட்டம் தீட்டினார். வேலைக்கு செல்வது போல் சென்று விட்டு தனது மனைவியை மட்டும் தனியாக தோட்டத்துக்கு அழைத்து வந்தார். அங்கு அவரிடம் சுஷ்மிதா மீண்டும் கள்ளத்தொடர்பு குறித்து தகராறு ஈடுபட்டனர். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை கொலை செய்துள்ளார். பின்னர், நகைக்காக கொலை நடைபெற்றது போல் நாடகம் ஆடியது தெரிவந்தது. இதனையடுத்து, கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள கள்ளக்காதலியை தீவிரமாக தேடி வருகின்றனர். 9 மாதம் கர்ப்பிணி பெண்ணை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

click me!