வெளியே படுத்திருந்த 11வது மாணவனுக்கு ஸ்கெட்ச்..முகத்தை சிதைத்த கும்பல் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம் !

Published : Apr 17, 2022, 01:23 PM IST
வெளியே படுத்திருந்த 11வது மாணவனுக்கு ஸ்கெட்ச்..முகத்தை சிதைத்த கும்பல் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம் !

சுருக்கம்

சென்னை, வண்ணாரப்பேட்டை, செரியன் நகர் 5வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கவியரசன். இவருடைய மகன் பார்த்திபன். இவருக்கு வயது 17. புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று இரவு காற்றுக்காக வீட்டு வெளியே படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென நள்ளிரவு அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது பார்த்திபன் தலை முகம் என ஐந்து இடங்களில் கத்தியால் வெட்டுப்பட்டு ரத்தம் கொட்டியது.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் பார்த்திபனை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வானமாமலை சம்பவ இடத்திற்கு வந்து வெட்டுப்பட்ட விசாரணையில் ஈடுபட்டனர்.

மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலிஸார், எதற்காக பார்த்திபனை வெட்டினார்கள்? யார் வெட்டியது என்பது குறித்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டுக்கு வெளியே உறங்கியபோது மாணவனின் முகத்தை சிதைத்த மர்ம கும்பலால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 

இதையும் படிங்க : ரஜினிக்கிட்ட கத்துக்குங்க விஜய் ! சமூக பதட்டத்தை ஏற்படுத்தாதீங்க.. குவைத்தில் கொந்தளித்த தமிமுன் அன்சாரி !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!