சாப்பாடு தகராறு... தந்தையின் நடு மண்டையில் அரிவாளால் ஒரேபோடு போட்டு படுகொலை செய்த மகன்..!

By vinoth kumarFirst Published Dec 8, 2019, 1:42 PM IST
Highlights

நேற்று மதியம் வீட்டில் பழனி மற்றும் அவரது மகன் கருப்பையா ஆகியோர் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, சாப்பாடு சரியில்லை, என கருப்பையா தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு பழனி, இது என்ன ஓட்டலா?, இருப்பதை சாப்பிடு என தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. அப்போது தந்தை பழனி, கருப்பையாவின் சாப்பாட்டு தட்டை தட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

சென்னையில் சாப்பாடு சரியில்லை என்ற தகராறில் மகன் தந்தையை கொடூரமாக வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னை திருமங்கலம், பாடிகுப்பம் ரோடு, காந்தி நகர், வி.வி.கோவில் தெருவைச் சேர்ந்தவர் பழனி (60). இவருடைய மகன் கருப்பையா (30). இவருக்கு திருமணமாகிவிட்டது. ஆனால் இவரது நடவடிக்கை சரி இல்லாததால் அவருடைய மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் கருப்பையா, தனது பெற்றோருடன் வசித்து வந்தார். தந்தை பழனிக்கும், கருப்பையாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று மதியம் வீட்டில் பழனி மற்றும் அவரது மகன் கருப்பையா ஆகியோர் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, சாப்பாடு சரியில்லை, என கருப்பையா தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு பழனி, இது என்ன ஓட்டலா?, இருப்பதை சாப்பிடு என தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. அப்போது தந்தை பழனி, கருப்பையாவின் சாப்பாட்டு தட்டை தட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

இதனால், ஆத்திரம் அடைந்த கருப்பையா தந்தையை சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர், ஆத்திரம் தீராததால் அரிவாளை எடுத்து வந்து தந்தை என்றும் பாராமல் பழனியை தலை, கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டினார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த பழனி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், பரிசோதனை செய்த மருத்துவர் பழனி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். 

இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட பழனி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தையை வெட்டிக்கொலை செய்து தலைமறைவாக உள்ள கருப்பையாவை போலீசார் தேடி வருகின்றனர்.

click me!