காசு வாங்க வந்த 15 வயது சிறுமியை கசக்கி எடுத்த கொடூரம்.. 45 வயது ஊழியரின் காம லீலைகளால் 3 மாதம் கர்ப்பம்..!

By vinoth kumarFirst Published Oct 10, 2022, 2:28 PM IST
Highlights

அரியானா மாநிலம் குர்கிராம் அடுத்த கந்த்சா கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் நூர் முகமது (45). இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதேபகுதியை சேர்ந்த பெண்ணின் இஸ்திரி கடைக்கு சென்று, தனது துணிகளுக்கு இஸ்திரி போட்டுக் கொடுக்கும்படி கேட்டார்.

15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

அரியானா மாநிலம் குர்கிராம் அடுத்த கந்த்சா கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் நூர் முகமது (45). இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதேபகுதியை சேர்ந்த பெண்ணின் இஸ்திரி கடைக்கு சென்று, தனது துணிகளுக்கு இஸ்திரி போட்டுக் கொடுக்கும்படி கேட்டார். அதன்படி அந்த பெண்ணும் நூர் முகமதுவின் துணிகளுக்கு இஸ்திரி போட்டுக் கொடுத்தார். அதற்கான கூலியை நூர் முகமதுவிடம் கேட்டபோது, அவர் தனது வீட்டிற்கு வந்து வாங்கிக் கொள்ளும்படி கூறினார்.

இதையும் படிங்க;- காலில் விழாத குறையாக கெஞ்சியும் காதலை ஏற்க மறுப்பு.. நடுரோட்டில் இளம்பெண் சரமாரியாக வெட்டி படுகொலை.!

இதையடுத்து தனது 15 வயது மகளை பணம் வாங்கி வருவதற்காக நூர் முகமதுவின் வீட்டிற்கு தாய் அனுப்பி வைத்துள்ளார். அப்போது அந்த சிறுமியிடம் நைசாக பேசி நூர் முகமது பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பாக வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவததாகவும் சிறுமியை மிரட்டியுள்ளார். இதனால், பயந்து போன சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளார். 

ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா அடுத்த சில வாரங்களில் சிறுமியின் தாயார் தனது உறவினரை பார்ப்பதற்காக வெளியூர் சென்றிருந்தார். அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நூர் முகமது, வீட்டில் தனியாக இருந்த அந்த சிறுமியை மீண்டும் மிரட்டி செய்துள்ளார். இந்நிலையில், சிறுமி வயிற்று வலியால் துடித்து வந்துள்ளார். இதனால், பதறிப்போன தாய் மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த தாய் தனது மகளிடம் கேட்ட நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதுள்ளார். இந்த சம்பவம்  தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர், நூர் முகமது மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க;-  தங்கச்சி கணவருடன் கள்ளக்காதல்.. உல்லாசம்.. தடையாக இருந்த கணவர் கொலை.. கூலிப்படையை சேர்ந்த பாஜக பிரமுகர் கைது

click me!