காதலியை கற்பழித்து கொலை செய்த காதலன்... ஹோட்டல் ரூம் போட்டு டாக்டர் செய்த வெறிச்செயல்!!

Published : Feb 03, 2019, 10:26 AM IST
காதலியை கற்பழித்து கொலை செய்த காதலன்... ஹோட்டல் ரூம் போட்டு டாக்டர் செய்த வெறிச்செயல்!!

சுருக்கம்

ஹோட்டல் அறையில் நர்ஸ் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக மீட்கப்பட்ட  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ அம்பேத்கர் நகரை சேந்தவர் சமந்தா. வெவிலியரான இவர் சுகாதார மையத்தில் பணிபுரிந்து வந்தார். சமந்தாவிற்கு ராஜேஷ் என்ற டாக்டருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.
 
இந்நிலையில், இருவரும் ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியுள்ளனர். சமந்தாவுடன் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது கல்யாணம் செய்துகொள்ளுமாறு டாக்டர் ராஜேஷிடம் கேட்டுள்ளார் சமந்தா, அந்த சமயத்தில்  இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கடும் கோபமடைந்த டாக்டர் ராஜேஷ் நர்ஸ் சமந்தாவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளார்.
 
ஒரு நாள் முழுவதும்  கதவு திறக்கப்படாததால், ஹோட்டல் நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சமந்தா கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அங்கு ஒரு கடிதம் இருந்தது. 

அதில் நான் டாக்டர் ராஜேஷ், எங்கள் மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்க்கும் சமந்தாவை உயிருக்கு உயிராக காதலித்தேன். ஆனால் அவள் அப்படி இல்லை. எல்லா விஷயத்திற்கும் சண்டை போட்டாள். ஆகவே தான் அவளை கொலை செய்தேன். நானும் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என குறிப்பிடப்பட்டிருந்தது.
 
கொலை செய்யப்பட்ட நர்ஸ் சமந்தாவின் உடலை மீட்ட போலீஸார் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தற்கொலை செய்து கொள்வதாக கூறிய டாக்டர் ராஜேசை தீவிரமாக தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

அடச்சீ.. இப்படி ஒரு தாயா? 31 வயது கள்ளக்காதலனுக்கு 18 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம்
பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கணவன் கண்முன்னே அலறிய மனைவி..