உல்லாசத்தின் போது தகராறு? கள்ளக்காதலியை சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை செய்த வாலிபர்..!

By vinoth kumarFirst Published May 14, 2021, 4:16 PM IST
Highlights

கள்ளக்குறிச்சி அருகே கள்ளக்காதல் தகராறில் பெண் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி அருகே கள்ளக்காதல் தகராறில் பெண் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் அம்மாபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மனோகர். அவரது மனைவி சங்கீதா (35). இவர்களுக்கு சுரேஷ், கோகுல் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனோகர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். எனவே சங்கீதா கூலிவேலைக்கு சென்று 2 மகன்களை வளர்த்து வந்தார். 

இந்நிலையில், இன்று காலை சங்கீதா பால்ராம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே மட்டப்பாறை செல்லும் சாலையில் தலை, கை, கால்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர், இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில்,. சங்கீதாவுக்கும், அத்தியூரை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.  இதனால், உல்லாசத்தின் போது தகராறு இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கொலை நடைபெற்றதா? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

click me!