கணவனை பிரிந்து ஆட்டோ டிரைவருடன் கள்ளக் காதல்.. நள்ளிரவில் உல்லாசத்தின் போது நடந்த பயங்கரம்..

By Ezhilarasan BabuFirst Published May 23, 2022, 5:29 PM IST
Highlights

கணவனைப் பிரிந்து கள்ளக் காதலனுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்த பெண் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கணவனைப் பிரிந்து கள்ளக் காதலனுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்த பெண் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருமணத்திற்கு புறம்பாக ஈடுபடும் ஆண் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் ஏற்படும் கொலை தற்கொலைகளும்  கூடிக்கொண்டே வருகிறது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் சின்னச் சின்ன சச்சரவுகளுக்கு கூட மன முறிவு ஏற்பட்டு திருமண உறவை முறித்துக்  கொள்ளும் தம்பதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் கணவனை பிரிந்து மூன்று ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்து வந்த பெண் கள்ளக் காதல் வலையில் சிக்கி அதே கள்ளக் காதலனால் கொலையுண்ட சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் ராமச்சந்திரபுரம் பாலாஜி நகரை சேர்ந்தவர் சம்பூர்ணா  இவரும் அதே பகுதியில் டீக்கடை நடத்திவரும் வேணு என்பவர் 11 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

சம்பூரண அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர் இந்நிலையில் அதே கிராமத்தில் தனது இரண்டு மகள்களுடன்  தனியாக வீடு எடுத்து  வசித்து வந்தார் சம்பூர்ணா. அப்போது ஒரு ஆட்டோ ஓட்டுநருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்களாக பழகினர் பின்னர் அது காதலாக மாறியது, நாளடைவில் திருமணத்துக்கு புறம்பான உறவில் அவர்கள் ஈடுபட்டு வந்தனர். அடிக்கடி வீட்டுக்கு வந்த ஆட்டோ டிரைவர் சம்பூர்ணாவுடன் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் இந்த மாதம் 20ஆம் தேதி இரவு அந்த ஆட்டோ டிரைவர் வழக்கம்போல நள்ளிரவில் சம்பூர்ணாவின் வீட்டிற்கு  வந்தார். இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. பின்னர் பொழுது விடிந்து பார்த்தபோது சம்பூர்ணா சடலமாக கிடந்தார்.

அவரது மகன்கள் இதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தாய் நிலை குறித்து அவர்களது பாட்டி ஜெய்யம்மாவுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு  சம்பூர்ணாவை தூக்கிச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். அவரது கழுத்து முழுவதும் காயங்கள் இருந்தது. இதனால் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்தனர். சம்பூர்ணாவுக்கு கள்ளக்காதலுடன் ஏதாவது தகராறு இருந்ததா? அதனால் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போன்ற சம்பவம் குண்டூர் மாவட்டத்திலும் நடந்துள்ளது.

துக்கிராலா மண்டலம் தும்புப்புடியை  சேர்ந்த ஒரு பெண் திருமணத்துக்கு புறம்பான உறவால் கொலை செய்யப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணின் கணவர் அடிக்கடி திருப்பதிக்கு பணி நிமித்தமாக சென்றபோது அந்தப் பெண்ணுக்கு மற்றொரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. சில வருடங்களாக அவர்கள் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த இளைஞர் தனது நண்பனுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்தினார். ஆனால் அந்த பெண் அதற்கு மறுத்துவிட்டார் இதனால் கள்ளக்காதலன் தனது நண்பனுடன் சேர்ந்து அந்தப் பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில் இரண்டே நாட்களில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மேலும் ஒரு பெண் கள்ளக்காதல் விவகாரத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

click me!