துணித்துவைக்க போவதாக சொல்லி ஆற்றங்கரையில் மனைவி உல்லாசம்.. நேரில் பார்த்த கணவர் எடுத்த விபரீத முடிவு..!

By vinoth kumarFirst Published May 30, 2020, 1:20 PM IST
Highlights

உறவினருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவியை கணவர் அதிகாலையில் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 உறவினருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவியை கணவர் அதிகாலையில் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை அருகே உள்ள மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பொன் இசக்கி (55). நெல்லையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முத்துலட்சுமி (50) வண்ணாரப்பேட்டையில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகளுக்கு திருமணமாகி திருப்பூரில் கணவருடன் வசித்து வருகிறார். மற்ற இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. வண்ணாரப்பேட்டையில் குடியிருந்து வந்த இவர்கள், கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் மணிமூர்த்தீஸ்வரம் வந்து வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், முத்துலட்சுமிக்கும், நெல்லை ஜங்சன் பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை பார்க்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் கள்ளக்காதல் மணிமூர்த்தீஸ்வரம் வந்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். மேலும் குளிக்கச் செல்லும்போது தாமிரபரணி ஆற்றின் கரையோரப் பகுதி இருவரும் தனிமையில் சந்தித்தும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவரம் பொன் இசக்கிக்கு தெரிய வரவே, அவர் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால், அவர்கள் கைவிடவில்லை. நேற்றிரவு இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அதன்பிறகு அனைவரும் தூங்கச் சென்று விட்டனர். 

இந்நிலையில், இன்று அதிகாலையில் எழுந்த முத்துலட்சுமி ஆற்றுக்கு சென்று துணிகளை துவைத்து, குளித்து விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது பொன் இசக்கிக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த பொன் இசைக்கி, அரிவாளை எடுத்து முத்துலட்சுமியை சரமாரியாக வெட்டினார். முகம், கழுத்து உள்ளிட்ட பல இடங்களில் வெட்டு பட்ட முத்துலட்சுமி சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

 அதன்பிறகு  பொன் இசக்கி தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்து போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அதன் பிறகு முத்துலட்சுமி உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவ மனையில் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே தப்பியோடிய பொன் இசக்கி தச்சநல்லூர் போலீசில் சரண் அடைந்தார். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!