உல்லாசத்திற்காக வீட்டை விட்டு வெளியேறிய 37 வயது பெண்... கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்..!

Published : Jan 05, 2021, 09:29 PM ISTUpdated : Jan 05, 2021, 09:35 PM IST
உல்லாசத்திற்காக வீட்டை விட்டு வெளியேறிய 37 வயது பெண்... கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்..!

சுருக்கம்

விழுப்புரம் அருகே கள்ளக்காதலனுடன் விஷம் குடித்த சென்னை பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கள்ளக்காதலன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

விழுப்புரம் அருகே கள்ளக்காதலனுடன் விஷம் குடித்த சென்னை பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கள்ளக்காதலன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

விழுப்புரம் மாவட்டம் இளங்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை(27) திருமணம் ஆகவில்லை. இவர் சென்னை வடபழனியில் உள்ள பேட்டரி கடையில் வேலை செய்தபோது, அதே பகுதியை சேர்ந்த திருமணமான மாலா(37) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலமாக மாறியது. 

கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய மாலா ராஜதுரையுடன் இளங்காடுக்கு வந்துள்ளார். அங்கு இருவரும் கணவன், மனைவி போல குடும்பம் நடத்தி வந்தனர். பின்னர், இருவரும் திண்டிவனம் அரகே உள்ள செங்கல் சூளையில் வேலை செய்துள்ளனர். இந்நிலையில், கடந்த 3ம் தேதி இளங்காடு வந்த இருவரும் பள்ளிகொண்டான்புரம் அருகே பூச்சிமருந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு வளவனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் இருவரையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரையும் பரிசோதித்த  மருத்துவர்கள் மாலா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ராஜதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கிசிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்