அடிப்பாவி.. பிள்ளைகளை தவிக்கவிட்டு 2வது முறையாக ஓட்டம்.. இறுதியில் கள்ளக்காதல் ஜோடி செய்த காரியம்.!

By vinoth kumarFirst Published Mar 17, 2022, 9:10 AM IST
Highlights

திருமணமான பன்னீர்செல்வம் (41) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பன்னீர்செல்வமும், ராமலட்சுமியும் வீட்டை விட்டு வெளியேறினர்.

வீட்டைவிட்டு வெளியேறிய கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

2 குழந்தைகளின் தாய்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள துரைச்சாமிபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி ராமலட்சுமி (32). இவர்களுக்கு 15 வயதில் மகனும், 13 வயதில் மகளும் உள்ளனர். மணிகண்டன் பூக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ராமலட்சுமிக்கும் வெம்பக்கோட்டை தாலுகா பழையாபுரத்தை சேர்ந்த திருமணமான பன்னீர்செல்வம் (41) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பன்னீர்செல்வமும், ராமலட்சுமியும் வீட்டை விட்டு வெளியேறி கேரள மாநிலம் மூணாருக்கு சென்றுவிட்டனர். பின்னர் 2 வாரங்கள் கழித்து, மணிகண்டன் தனது மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

இதையும் படிங்க;- திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை... அதனால் தான் இப்படி செஞ்சேன்..! இளைஞர் டூ சாமியார் 'ட்விஸ்ட்' !!

வாய்ஸ் மெசேஜ்

இதனையடுத்து, ராமலட்சுமி தனது கணவன் மற்றும் பிள்ளைகளுடன்  வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் கடந்த 11-ம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு மணிகண்டன் செல்போனுக்கு “வாய்ஸ் மெசேஜ்” ஒன்று வந்தது. அதில் பேசிய ராமலட்சுமி, தான் பன்னீர்செல்வத்துடன் செல்வதாக கூறி இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் தனது மனைவியை பல இடங்களில் தேடினார். ஆனால், அவரை பற்றி எந்த தகவலும் மணிகண்டனுக்கு கிடைக்கவில்லை. 

கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

இந்நிலையில், சாத்தூர்-ராஜபாளையம் சாலையோரத்தில்  ராமலட்சுமியும், பன்னீர்செல்வமும் உயிரிழந்து கிடப்பதாக மணிகண்டனுக்கு தகவல் வந்தது. அலறி அடித்துக்கொண்டு மனைவியின் உடலை பார்த்து மணிகண்டன் பார்த்து கதறினார். இதுதொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க;- அட கடவுளே... 45 வயது ஆண்டியுடன் 21 வயது இளைஞர் காதல்... 2 பிள்ளைகளை விட்டு ஓட்டம் பிடித்த தாய்..!

click me!