கள்ளகாதலனுடன் அடிக்கடி உல்லாசத்தால் கர்ப்பம்.. பிஞ்சு குழந்தையை எருக்கம் பால் கொடுத்து கொன்ற கொடூர தாய்..!

By vinoth kumarFirst Published Mar 26, 2020, 5:53 PM IST
Highlights

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த ஆசனம் பட்டு ஊராட்சி கல்லப்பாறையில் உள்ள விவசாய கிணற்றில் அருகே இன்று காலை துர்நாற்றம் வீசியது. இதனால் அவ்வழியாக சென்றவர்கள் சந்தேகமடைந்து கிணற்றில் எட்டிப்பார்த்த போது கிணற்றில் ஒரு கோணிப்பையில் இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் விஏஓ தீபாவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வேப்பங்குப்பம் போலீசாருக்கு தெரிவித்தார்.

கணவருடன் தகராறு செய்து விட்டு பிரிந்து வாழும் இளம்பெண் கள்ளத்தொடர்பில் பிறந்த குழந்தையை எருக்கம் பால் கொடுத்து கொலை செய்து சடலத்தை கிணற்றில் வீசி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த ஆசனம் பட்டு ஊராட்சி கல்லப்பாறையில் உள்ள விவசாய கிணற்றில் அருகே இன்று காலை துர்நாற்றம் வீசியது. இதனால் அவ்வழியாக சென்றவர்கள் சந்தேகமடைந்து கிணற்றில் எட்டிப்பார்த்த போது கிணற்றில் ஒரு கோணிப்பையில் இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் விஏஓ தீபாவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வேப்பங்குப்பம் போலீசாருக்கு தெரிவித்தார்.

 அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றிலிருந்து கோணிப் பையை திறந்து பார்த்தபோது அதில் பிறந்து ஒரு சில நாட்களே ஆன நிலையில் பெண் குழந்தை ஒன்று அழுகிய நிலையில் சடலமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.  விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பெருமாள் மனைவி ஜெயலட்சுமி குழந்தை என்பது கள்ளக்காதலில் பிறந்ததால் குழந்தையை கொன்றது தெரிந்தது.

 இதனையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது பெருமாளுக்கும் ஜெயலட்சுமிக்கும்  திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிறது. கூலித் தொழிலாளியான இவருக்கு 11 மற்றும் 9 வயதில் 2 மகன்கள் உள்ளனர். தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கடந்த ஓராண்டுக்கு மேலாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த திருமணமான ஒருவருக்கும் ஜெயலட்சுமிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் ஜெயலட்சுமி கர்ப்பமானார். கர்ப்பிணியான அவர் யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள்ளேயே இருந்துள்ளார்.

 கடந்த 20-ம் தேதி வீட்டிலேயே அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. கணவர் பிரிந்து சென்ற நிலையில் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால் குழந்தை பிறந்தது என ஊருக்கு தெரிந்தால் அவமானம் ஆகிவிடும் எனக் கருதி ஜெயலட்சுமி மறுநாள் காலை அந்த குழந்தைக்கும் எருக்கம் பால் கொடுத்து கொலை செய்துள்ளார். பின்னர் சடலத்தை உடனடியாக வெளியே கொண்டு சென்றால் அனைவருக்கும் தெரிந்துவிடும் என கருதி ஜெயலட்சுமி அன்று இரவு காத்திருந்த இரவு 10 மணிக்கு மேல்  விவசாய கிணற்றில் வீசி உள்ளார் என  போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!